December 5, 2025, 9:34 PM
26.6 C
Chennai

சுபாஷிதம்: நட்பை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும்!

subhashitam
subhashitam

சுபாஷிதம் | ஸ்பூர்த்தி பதம்
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்!

தெலுங்கில்: பி.எஸ்.சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

22. நட்பை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும்!

ஸ்லோகம்:

இச்சேத்யேன ஸ்திராம் மைத்ரீம் த்ரீணி தத்ர ந காரயேத்|வாக்வாதம் அர்தசம்பந்தம் தத் பத்னீபரிபாஷணம்||

பொருள்

நிலையான நட்பை விரும்புபவர்கள் நண்பர்களோடு இந்த மூன்று செயல்களிலும் ஈடுபடக்கூடாது. வாக்குவாதம், பணம் கொடுக்கல் வாங்கல்கள், நண்பனின் மனைவியிடம் அனாவசிய பேச்சுகள்.

விளக்கம்:

நண்பர்களை சம்பாதிப்பது என்பது ஒரு கலை. அந்த நட்பை நிலைநிறுத்திக் கொள்வது என்பது சற்று கடினமான பணி. இரு நண்பர்கள் இடையே நட்பு கெடாமல் இருக்க வேண்டும் என்றால் கவனம் செலுத்த வேண்டியவை மூன்று உள்ளன. அவை குறித்து விவரிக்கும் புகழ்பெற்ற செய்யுள் இது. சண்டைக்கு இந்த மூன்றும் காரணங்கள். ஜாக்கிரதை என்று எச்சரிக்கிறது.

இரண்டு பேரின் அபிப்பிராயங்கள் வேறுவேறாக இருக்கும்போது வரும் வாக்குவாதங்கள் சிறு காற்று பெரும் புயலானது போல நட்பைக் கெடுத்து விடும். நண்பர்களிடையே வாக்குவாதங்கள் இருக்கக்கூடாது. உரையாடல்கள் இருக்கலாம்.

அடுத்து பணம். பண விஷயத்தில் கொடுக்கல் வாங்கல் எப்போதுமே இருவர் இடையே சண்டை மூட்ட கூடியது. வியாபாரத்தில் பங்குதாரர்கள் பிரிந்து போவதை சர்வ சாதாரணமாக பார்க்கிறோம். அதற்குக் காரணம் இதுதான். ‘மாதா புத்ர விரோதாய ஹிரண்யாய நமோநம:’ – தாய்க்கும் தனயனுக்கும் இடையே பகையை ஏற்படுத்தும் பணமே! உனக்கு நமஸ்காரம்! என்கிறார் ஒரு கவிஞர்.

ஆனால் நண்பர்களிடையே இருக்கவேண்டிய குணங்களில் கொடுக்கல்-வாங்கல் கட்டாயம் இருக்கும். ஏனென்றால் நண்பனின் தேவைக்கேற்ப பண உதவி செய்ய வேண்டும். அது கூட முறையாக, கவனத்தோடு, எழுத்துப்பூர்வமான நடைமுறையோடு விளங்க வேண்டும். அது விரோதத்தை வளர்க்காது. அடுத்து கடைசியாக பெண்கள் பற்றி குறிப்பிடுகிறார் சுபாஷிதக்காரர். நண்பனின் மனைவி மனம் வருந்தும்படி பேசுவது விரோதத்திற்கு வழிகோலும் என்று எச்சரிக்கிறார். அவளுக்கு தன் கணவன் மீதும் நண்பன் மீதும் கௌரவத்தை வளர்க்கும் உரையாடலை வரவேற்கலாம்.

ஆனால் அனாவசிய விஷயங்கள் பற்றிப் பேசுவது பகைக்கு காரணம் ஆகும் என்பது இந்த செய்யுளின் தாத்பரியம். இந்த மூன்றிலும் கவனத்தோடு இருந்து ஆபத்துகளில் சிக்காமல் நட்பை வாழ்நாள் முழுவதும் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories