திருப்பதி: சர்வதரிசன நேர ஒதுக்கீடு டோக்கன்கள் தற்காலிக நிறுத்தம்!

thirupathi

திருப்பதியில் பக்தர்களுக்கு சர்வதரிசன நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்கள் வழங்குவதை தேவஸ்தானம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

திருமலை ஏழுமலையான் தரிசனம் கரோனா பொது முடக்கத்திற்கு பின் கடந்த ஜூன் 11ம் தேதி முதல் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. முதலில் 6 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அதை 12 ஆயிரமாக தேவஸ்தானம் உயர்த்தியுள்ளது.

இதில் 9 ஆயிரம் டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமும், 3 ஆயிரம் டிக்கெட்டுகள் திருப்பதியில் உள்ள சர்வதரிசன டோக்கன் கவுண்டர்களிலும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருப்பதியில் கொரோனா நோய்த் தொற்று பெருகி வருவதால், செவ்வாய்க்கிழமை முதல் வரும் ஆக.5ம் தேதி வரை முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. காலை 11 மணிக்கு மேல் கடைகள் திறக்கவும், பொது மக்கள் வெளியில் நடமாடவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

எனவே, திருப்பதியில் உள்ள பூதேவி காம்பளக்சில் சர்வதரிசன நேர ஒதுக்கீடு டோக்கன்கள் வழங்குவதை தேவஸ்தானம் செவ்வாய்க்கிழமை முதல் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. மீண்டும் தரிசன டோக்கன் அளிக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. ஆன்லைன் மூலம் தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் திருமலைக்கு சென்று ஏழுமலையானை தரிசிக்க மட்டும் காவல்துறையினர் அனுமதி வழங்குகின்றனர்.

பத்மாவதி தாயார் கோயில் மூடல்

திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோயிலில் ஸ்ரீபாதம் தாங்கி(வாகனங்களை சுமப்பவர்) ஒருவருக்கு கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்ட நிலையில் கோயில் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டு பக்தர்களுக்கு தரிசன அனுமதி மறுக்கப்பட்டது.

கோயில் முழுவதும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. சுத்தப்படுத்தும் பணிகள் நிறைவு பெற்றவுடன் இன்று(புதன்) காலை வழக்கம் போல் கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட உள்ளனர் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories