February 21, 2026, 10:57 PM
27.3 C
Chennai

திருப்பதி: சர்வதரிசன நேர ஒதுக்கீடு டோக்கன்கள் தற்காலிக நிறுத்தம்!

thirupathi

திருப்பதியில் பக்தர்களுக்கு சர்வதரிசன நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்கள் வழங்குவதை தேவஸ்தானம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

திருமலை ஏழுமலையான் தரிசனம் கரோனா பொது முடக்கத்திற்கு பின் கடந்த ஜூன் 11ம் தேதி முதல் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. முதலில் 6 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அதை 12 ஆயிரமாக தேவஸ்தானம் உயர்த்தியுள்ளது.

இதில் 9 ஆயிரம் டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமும், 3 ஆயிரம் டிக்கெட்டுகள் திருப்பதியில் உள்ள சர்வதரிசன டோக்கன் கவுண்டர்களிலும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருப்பதியில் கொரோனா நோய்த் தொற்று பெருகி வருவதால், செவ்வாய்க்கிழமை முதல் வரும் ஆக.5ம் தேதி வரை முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. காலை 11 மணிக்கு மேல் கடைகள் திறக்கவும், பொது மக்கள் வெளியில் நடமாடவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

எனவே, திருப்பதியில் உள்ள பூதேவி காம்பளக்சில் சர்வதரிசன நேர ஒதுக்கீடு டோக்கன்கள் வழங்குவதை தேவஸ்தானம் செவ்வாய்க்கிழமை முதல் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. மீண்டும் தரிசன டோக்கன் அளிக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. ஆன்லைன் மூலம் தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் திருமலைக்கு சென்று ஏழுமலையானை தரிசிக்க மட்டும் காவல்துறையினர் அனுமதி வழங்குகின்றனர்.

பத்மாவதி தாயார் கோயில் மூடல்

திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோயிலில் ஸ்ரீபாதம் தாங்கி(வாகனங்களை சுமப்பவர்) ஒருவருக்கு கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்ட நிலையில் கோயில் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டு பக்தர்களுக்கு தரிசன அனுமதி மறுக்கப்பட்டது.

கோயில் முழுவதும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. சுத்தப்படுத்தும் பணிகள் நிறைவு பெற்றவுடன் இன்று(புதன்) காலை வழக்கம் போல் கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட உள்ளனர் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories