டேராடூன்:ஒட்டுமொத்த ‘டி-20’ வரலாற்றில் அதிக ரன் எடுத்து உலக சாதனை படைத்துள்ளது ஆப்கானிஸ்தான் அணி.
ஆப்கன் அணி, அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் அதிகபட்சமாக 3 விக்கெட் இழப்புக்கு 278 ரன் குவித்து சாதனை படைத்தது.
இந்தியா வந்துள்ள அயர்லாந்து அணி ஆப்கன் அணிக்கு எதிராக மூன்று ‘டி-20’, ஐந்து ஒருநாள், ஒரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்கிறது.
முதல் ‘டி-20’ போட்டியில் ஆப்கன் அணி வென்று 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இதை அடுத்து, இரண்டாவது போட்டி டேராடூனில் நடைபெற்றது.
முதலில் பேட்டிங் செய்த ஆப்கன் அணியில் உஸ்மான் கனி 73 ரன் எடுத்தார். ஹஸ்ரத்துல்லா 62 பந்தில் 162 ரன் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதை அடுத்து ஆப்கன் அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 278 ரன்ககுவித்தது.
278 ரன் என்பது, டி20 வரலாற்றில் உச்ச பட்ச ரன் குவிப்பு! புதிய உலக சாதனை படைத்தது ஆப்கன் அணி.
பின்னர் விளையாடிய அயர்லாந்து அணியில், கெவின் ஓ பிரையன் 37 ரன்னும், கேப்டன் பால் ஸ்டெர்லிங் 91 ரன்னும் எடுத்தனர். இருப்பினும், ரன் அதிகம் என்பதால் மற்றவர்கள் சொதப்ப, அயர்லாந்து அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 194 ரன் எடுத்து, 84 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதை அடுத்து ஆப்கன் அணி டி20 தொடரை 2-0 என கைப்பற்றியது.