கள்ளிப்பால் கொடுத்துக் கொல்லும் ‘தமிழ்’ ஊடகங்கள்!

Published:

breaking news tv screen saver background vector 18533369 - 2026

பிறந்த குழந்தைக்குக் கள்ளிப்பாலைக் கொடுத்துக் கொல்லும் செயலைத்தான் இங்கிருக்கும் ஊடகங்கள் செய்து கொண்டிருக்கின்றன என்பதை –

நீண்ட நாட்களுக்குப் பிறகு சில மணி நேரம் இன்று தமிழ் செய்தித் தொலைக்காட்சிகளைப் பார்த்துப் புரிந்து கொண்டேன் – அடேய்ங்கப்பா, என்ன ஒரு வார்த்தை ஜாலம் –

முதலாவதாக News 7 -ல் நெறியாளர் சுகிர்தா திரு.கரு.நாகராஜன் அவர்களை பேசவே விடவில்லை என்பது அப்பட்டமாகத் தெரிந்தது.

அடுத்ததாக News 18 குனசேகரன் அதே பழைய மோடி தருவதாகச் சொன்னதாக நம்ப வைக்கப்பட்ட 15 லட்சம் பற்றியே பேசுகிறான்

அடுத்ததாக தந்தி TV அசோகவர்த்தினி இதிலும் அதே பதினைந்து லட்ச ரூபாய் பல்லவி – வெறுத்துப் போய் –

சத்தியம் TV பக்கம் ஒதுங்கினால் அங்கேதான் உச்சபட்ச டென்ஷன் காத்திருக்கிறது – (எனக்கு ஏற்கனவே BP இருக்கிறது) –

அங்கே, லயோலாக் கல்லூரியில் ஓவியக் கண்காட்சி(?) நடாத்திச் சிறப்பித்த முகிலனின் பேட்டி – ஒவ்வொரு ஓவியத்திற்கும் விளாக்கம் சொல்லிக் கொண்டிருந்தான் – முதலாவதாக, (நானே இடையில் தான் பார்த்தேன் அதுவே இங்கே முதலாவதாகிறது)

ALSO READ:  ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

நந்தினி என்ற ஓவியத்திற்கு விளக்கம் –
நெறியாளன் :- ஏன் அந்த ஓவியத்தில் பெண் உறுப்பில் சூலம்?- முகிலன்:- அதாவது, நந்தினி என்ற தலித் பெண் கற்பழிக்கப்பட்டுக் கொல்லப்பட்டாள் அதனால்தான் – அடப்பாவி, ஒரு தலித் பெண் கற்பழிக்கப்பட்டதற்கும் திரிசூலத்திற்கும் என்ன சம்பந்தம்? –

அடுத்ததாக – நெறியாளன்:- ஏன் பாரதமாதாவை கேவலமாகச் சித்தரித்து ஓவியம்?-
முகிலன்:-பாரதமாதா என்பது ஒரு உருவகம் –
அதை அவர்கள் மதிக்கவில்லை, பண்ணாட்டுக் கம்பெனிகள் இந்த மண்ணைச் சுரண்டுவதைக் கலைப்படைப்பாகத் தீட்டி இருக்கிறேன் –

அட, வீணாப்போணவனே – அன்னை சோனியா வாழ்க –
கலைஞர் கருணாநிதி வாழ்க – தளபதி ஸ்டாலின் வாழ்க – என்று கூவும் கூலிப்படைகளுக்கு மத்தியில் – பாரத மாதா வாழ்க என்று தேசத்தைத் தாயாகப் போற்றும் பா.ஜ.க வினர் பாரதமாதாவை மதிக்கவில்லையா?- பன்னாட்டுக் கம்பெனிகள் எல்லாம் 2014க்குப் பிறகுதான் இங்கே கடை விரிக்க ஆரம்பித்ததா?-

பன்னாட்டுக் கம்பெனிகள் இல்லையென்றால் இங்கே பாதிப்பேருக்கு வேலையே இருக்காதே?- சாப்பாட்டிற்குப் பிச்சை எடுக்கச் சொல்கிறாயா? – சரி, உள்நாட்டுக் கம்பெனிகள் வளர வேண்டும் என்று பதஞ்சலியை ஆதரிக்கக் கோரினாலும் – இந்து சாமியாரின் கம்பெனி என்று ஏகடியம் பேசுகிறாயே?- இதுதான் பாரதமாதா மேல் கொண்ட பற்றா – பாரதமாதாவை Metoo என்று ஓவியம் வரையும் பொழுதே தெரியும் – உனது தாயாரும் பலமுறை Metoo என்று கதறிக் கதறி – குறைபாட்டுடன் பிறந்த குழந்தை நீ என்று _ உனது ஓவியங்கள் சொல்வது உனது தாழ்வு மனப்பான்மையை – நான், 2005 லிருந்து ஓவியங்கள் வரைந்து வருகிறேன் என்று கூறுகிறாய்-

ALSO READ:  அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

ஆனால் ஒரு ஓவியம் கூட – மதரசாவில் வைத்துக் கொல்லப்பட்ட சிறுமி கீதாவிற்காகவோ – கேரள பாதிரிக்கு எதிராகவோ இல்லாமல் இருக்கும் பொழுதே தெரிகிறது – நீ , எலும்புத் துண்டுகளுக்காக ஓவியத்திறமையை விற்கும் வேசி என்று – உன்னைப் போன்றவர்களை விளம்பரம் செய்யும் ஊடகங்களும் சிவப்பு விளக்கு ஊடகங்கள் என்று _ ஆனால், உன்னைப் போன்றவர்களை வைத்துதான் – மோடி அவர்களைப் புரிந்து கொள்கிறோம் – மோடி அவர்களை நேசிக்கிறோம் – பாரதமாதாவை நேசிக்கிறோம்

பாரதமாதா வாழ்க !

  • ந.முத்துராமலிங்கம் –

Related articles

Recent articles

spot_img