
நகைச்சுவை நடிகர் பாலாஜி மீது அவரது மனைவி நித்யா போலீஸில் புகார் அளித்துள்ளார். அதில், கணவர் (பாலாஜி) தன்னை சாதிப்பெயரை சொல்லி திட்டுவதாகவும், கொடுமைப்படுத்துவதாகவும் கூறப்பட்டு இருந்தது.
பாலாஜி, நித்யா இருவரும் தனியார் தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அவர்களுக்குள் பிரச்னை இருந்ததாக அந்நிகழ்ச்சியிலே ஒளிபரப்பி இருந்தனர். இவர்களுக்கு போர்ஷிகா என்ற 6 வயது பெண் குழந்தை ஒன்று உள்ளது. மாதவரத்தில் வசித்து வருகின்றனர்.
பல திரைப்படங்களில் நடித்துள்ளவர் நடிகர் பாலாஜி. லிங்கா படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ளார். வடிவேலு, விவேக் உள்ளிட்ட நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். தற்போது விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக வருகிறார்.
மாதவரம் காவல் நிலைத்தில் பாலாஜி மீது நித்யா அளித்த புகாரில், ஜாதியைச் சொல்லித் திட்டுகிறார் அந்தப் புகாரில், தனது சமுதாயத்தைக் குறிப்பிட்டு சொல்லி திட்டுகிறார். அடிக்கிறார். கொடுமை செய்கிறார் என்று கூறியுள்ளார்.
மாதவரம் போலீஸார் இதுவரை வழக்குப் பதிவு செய்யவில்லை. விசாரணை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


