ஜவான் திரைப்படத்தில் கௌரவத் தோற்றத்தில் நடிகர் விஜய்..!?

இயக்குநர் அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான் நடிக்கும் ஜவான் திரைப்படத்தில் கௌரவத் தோற்றத்தில் வரப் போகிறார் நடிகர் விஜய்  என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஷாருக் கானின் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் முதல்முதலாக இயக்குநராக அறிமுகமாகிறார் அட்லீ.

ஏற்கெனவே தமிழில் விஜய்யை வைத்து பிகில், மெர்சல், தெறி என்று மூன்று சூப்பர் ஹிட் படங்களைத் தந்த இளைஞர் அட்லீ. எனவே, இந்தப் படத்தில் விஜய் தோன்றுவதில் வியப்பில்லை.

இதுபற்றி உறுதி செய்யப்பெற்றதும், அனேகமாக செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் விஜய்யும் ஷாருக் கானும் பங்கேற்கும் காட்சிகள் சென்னையில் எடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. லொகேஷன் முடிவு செய்யப்பட்டதும் செட் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும்.

இந்தப் படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார். ஷாருக் கானுடன் நயன்தாரா நடித்த சில காட்சிகள் அண்மையில் மும்பையில் எடுக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.

இதனிடையே, வில்லனாகக் கலக்கிக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதியும் யோகி பாபுவும்கூட இந்தப் படத்தில் இடம் பெறக் கூடும் என்றும் கோடம்பாக்கத்தில் வலுவாகப் பேசப்படுகிறது. ஆனால், இது பற்றி அதிகாரப்பூர்வமாக இதுவரை எதுவும் அறிவிக்கப்படவில்லை.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

2023 ஜூன் 2 ஆம் தேதி ஜவான் திரைப்படத்தை வெளியிடுவதெனத் திட்டமிட்டுப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்படவுள்ள ‘பான் இந்திய’ படமான ஜவான் திரைப்படத்துக்கு இசையமைப்பவரும் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்தவர்தான் – அனிருத்.

நடிகரும் இயக்குநருமான விஜய்யின் நண்பருமான பிரபுதேவா இயக்கத்தில் அக் ஷய் குமார் நடிப்பில் 2012-ல் ஹிந்தியில் வெளியான ரௌடி ரதோர் திரைப்படத்திலும் கௌரவத் தோற்றத்தில் விஜய் தோன்றினார் என்பது குறிப்பிடத் தக்கது.

Vijay Shah RUkh Khan - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories