சென்னை:
ராஜீவ் கொலையாளிகள் 7 பேரையும் விடுவிக்க வலியுறுத்தி பேரணியாகச் சென்று முதல்வரிடம் கோரிக்கை வைத்து கவனத்தை ஈர்க்கப் போவதாக நடிகர் சங்க தலைவர் நாசர் பேசினார்.
இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தென்னிந்திய நடிகர்சங்க தலைவர் நாசர் பேசியது:
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 7 பேரையும் 161ம் சட்டப்பிரிவை பயன்படுத்தி விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைக்க இருக்கிறோம். அதனை வெறும் கடிதமாக கொடுக்காமல், முதல்வர் ஒதுக்கும் நேரத்தை வைத்து ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் பேரணியாக சென்று முதல்வரிடம் கோரிக்கை வைக்க இருக்கிறோம். ஒட்டு மொத்த தமிழ் திரையுலகமும் பேரணியாக திரளும் போது மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்படும் என்று கூறினார்.



