மதுகுடிப்பது தமிழன் கலாசாரம்; அதியமானும் ஔவையும் மது குடித்திருக்கிறார்கள்: வைரமுத்து

சென்னை:

மதுகுடிப்பது தமிழனின் பழைய கலாச்சாரம்; ஔவையும் அதியமானும்கூட மது அருந்திய குறிப்புகள் உண்டு என்று கவிஞர் வைரமுத்து பேசினார்.

திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகரிலுள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு விழாவில் கூடியிருந்தவர்களிடம் கவிஞர் வைரமுத்து உரையாற்றினார்.

அப்போது அவர், ஜல்லிக்கட்டு குறித்தும், தமிழகத்தில் நிகழ்ந்த மது ஒழிப்பு குறித்தும் சில கருத்துகளைச் சொன்னார்.

அவர் பேசியதிலிருந்து…

“ஜல்லிக்கட்டில் மாடுகளுக்கு எந்தக் காயமும் இல்லை. சட்டம் என்பது காட்சிப்பட்டியலில் காளைகளை சேர்த்ததால் தடை செய்யப் பட்டிருக்கிறது. சட்டத்தை திருத்தினால் ஒழிய காளைகளுக்கு விடுதலை இல்லை. வாடிவாசலில் தேங்கி நிற்கிற காளைகள் வெளிவரவேண்டும் என்றால் சட்டத்திருத்தம்தான் தெளிவான தீர்க்கமான தீர்வாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

ஏறு தழுவுதல் என்பது ஈராயிரம் ஆண்டுக் கலாச்சாரம். அந்த ஈராயிரம் ஆண்டுக் கலாச்சாரத்தை ஒரு சட்டம் முடக்குகிறது என்பதை தமிழினம் ஏற்றுக் கொள்ளாது. ஏறுதழுவுதலில் காளைகளுக்கு எந்தக் காயமும் இல்லை. அது ஒரு வீர விளையாட்டு மனிதர்கள் தங்கள் வீர விளையாட்டை எருதுகளோடு விளையாடிக் கொண்டாடுகிறார்கள் அது ஒரு விளையாட்டு என்று கருத வேண்டுமே தவிர விலங்குவதை என்று கருதக் கூடாது.

ALSO READ:  ஜனநாயகன் - விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

திருவள்ளுவரை உயர்த்திப் பிடிக்கிற போது தமிழர்கள் தங்களையே உயர்த்திப் பிடிக்கிறார்கள் என்று பொருள். திருக்குறள் தமிழில் எழுதப்பட்ட நூல் என்ற போதிலும் அது எல்லா மொழிகளுக்கும் பொதுவானது.

திருக்குறள் தமிழர்களுக்குச் சொல்லப்பட்ட போதிலும் அது எல்லா மாநிலத்திற்கும் பொதுவானது. இங்கே ‘உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு’ என்று ஒரு குறள் பாடப்பட்டது. திருவள்ளுவர் உடுக்கை இழந்தவன் கைபோல  என்றுதான் எழுதியிருக்கிறார்.

சட்டை இழந்தவன் கைபோல, வேட்டி இழந்தவன் கைபோல, சேலைஇழந்தவள் கைபோல,  ஜீன்ஸ்இழந்தவன் கைபோல என்று எழுதவில்லை.காரணம் ஆடைகள் மாறலாம். உடுத்தல் என்கிற கலாச்சாரம் என்றும் மாறாது. எனவே காலம் கடந்து  நிலைக்கவே திருவள்ளுவர்  ‘உடுக்கை’ என்று எழுதினார்.

முதலில் திருவள்ளுவரை இன்று நிரம்பவே நினைக்க வேண்டிய சூழலில் தமிழ்ச் சமூகம் இருக்கிறது. மது அருந்துதல் என்பது தமிழர்களின் பழைய கலாச்சாரம் தமிழன் மது அருந்தவில்லை என்பது பொய். அதியமான் அருந்தியிருக்கிறான்; ஔவை கூட மது அருந்தியிருக்கிறாள் என்று குறிப்பு இருக்கிறது. ஆனால் அந்த மது ,வாழ்வுக்கு எதிராக, கலாச்சாரத்துக்கு எதிராக, மனிதகுல மேன்மைக்கு எதிராகஆகிற போது அதை எதிர்த்து முதலில் குரல் கொடுத்தவர் திருவள்ளுவர் என்கிற பெருங்கவிஞர்தான்  என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

ALSO READ:  ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

மதுவுக்கு எதிராக எழுந்த முதல்  திருக்குரல் திருக்குறள்தான். கள்ளுக்கு எதிராக, போதைக்கு எதிராக, மயக்கத்துக்கு எதிராக அந்த கருத்தை தமிழகம் அமல் படுத்த வேண்டிய கட்டாயத்தில் இப்போது நிற்கிறது.

தமிழ்ச் சமூகம் மனித வளம் மிக்கது இம்மண்ணின் மிகப்பெரிய சொத்து மனித வளம்தான். அந்த மனித வளத்தை பாழ்படுத்துகிற ,பின்னுக்குத் தள்ளுகிற மனித வள மேம்பாட்டைக் குலைக்கிற மதுவை முற்றிலும் எதிர்த்து போராடினால் ஒழிய தமிழ்ச் சமூகம் மேம்பட வழியில்லை என்றே தோன்றுகிறது.

மதுவற்ற தமிழகம், மதுவற்ற தமிழன்,வள்ளுவன் கனவு கண்ட தமிழகம் உருவாக வேண்டும் என்பதே இந்தத் திருவள்ளுவர் திருநாளில்  நாம் அறிந்து கொள்ள வேண்டிய செய்தியாக  இருக்கிறது. இந்த நேரத்தில் மேலும் ஒரு செய்தி ,தமிழர்களின் வீர விளையாட்டு ஏறுதழுவுதல் .அது இப்போது தடைசெய்யப் பட்டிருக்கிறது .அந்தத் தடையை யார் செய்தார்கள் என்பது இரண்டாம் பட்சம். நீதிமன்றத்தைக் குறை சொல்லி ஒரு பயனும் இல்லை. சட்டத்தைத்தான் குறை சொல்ல வேண்டும்…” என்று பேசினார்.

ALSO READ:  ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

செய்தி: ஆர்.கே.அருள்செல்வன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Entertainment News

Popular Categories