சுசீந்திரன் இயக்கத்தில் உதயநிதி, விஷ்ணு விஷால்!

திரைப்பட துறையில் தரமான படங்களை தயாரிப்பதன் மூலமும், வெற்றிகரமான படங்களை விநியோகிப்பதன் மூலமும் தனக்கென தனி பெயரை ஈட்டிய Red Giant Movies தங்களது 12 ஆவது தயாரிப்பை, சென்னையில் எளிமையான பூஜை மூலம் துவக்கி உள்ளனர்.

ஒரு நட்சத்திரமாக தனது அந்தஸ்தை உயர்த்திக் கொண்ட உதயநிதி ஸ்டாலின், அந்த தகுதியை தக்க வைத்துக் கொள்ளும் வகையில் இயக்குனர் சுசீந்திரன் உடன் இணைந்து தன்னுடைய அடுத்த படத்தை துவக்குகிறார்.

இதுகுறித்து இயக்குனர் சுசீந்திரன் கூறும்போது, ‘உதய் சாருடன் இணைந்து பணியாற்றுவது மிக சந்தோஷமான விஷயம். அவருடன் இணைந்து பணியாற்ற சரியானக் கதைக்கு காத்துக் கொண்டு இருந்தேன். அதற்கேற்ற கதை வந்தவுடன் தயங்காமல் அவரை அணுகினேன், இதோ இன்று பூஜை, விரைவில் படப்பிடிப்பு. உதய் சாருடைய பலமே படத்துக்கு படம் வித்தியாசம் காட்ட வேண்டும் என்கிற அவருடைய உத்வேகம் தான். அந்த உத்வேகமே இந்தக் கதைக்கு உரமாகும், இந்தப் படத்தில் உதயநிதியுடன் விஷ்ணு விஷாலும் இணைந்து நடிக்க உள்ளார்.

உதய் சாருக்கு இணையான பலமான கதாப்பாத்திரம் அவருக்கு. தொடர்ந்து மூன்று ஹிட் படங்கள் கொடுத்த தன்னம்பிக்கை அவரது எண்ணத்திலும் செயலிலும் எதிரொலிக்கிறது.

‘அச்சம் என்பது மடமையடா’ படம் வெளி வரும் முன்னரே ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பு பெற்ற மஞ்சிமா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகைக்கான தேர்வு நடைப் பெற்றுக் கொண்டு இருக்கிறது.

டி இமான் இந்தப் படத்துக்கு இசை அமைக்கிறார். ஏற்கனவே இதே நிறுவனத்துக்கு ‘மனிதன்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்யும் மதி, இந்தப் படத்துக்கும் ஒளிப்பதிவு செய்கிறார். ஒரு நிறுவனத்துக்கு தொடர்ந்து இரண்டு படங்களை ஒளிப்பதிவு செய்வதன் மூலம் அவர் தன்னுடைய திறமையை நிரூபித்துக் கொள்கிறார்.

பல்வேறு தலைப்புகளை இந்தப் படத்துக்காக பரிசீலனை செய்து வருகிறோம்.கதைக்கேற்ற சரியான தலைப்பு கிட்டியவுடன் அறிவிப்போம். மார்ச் மாதம் படப்பிடிப்பு துவக்க பட உள்ளது’ என்றுக் கூறினார் இயக்குனர் சுசீந்திரன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

Entertainment News

Popular Categories