அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தெறி படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது. படத்திற்கான பின்னணி இசைச் சேர்ப்பு வேலைகளும், டப்பிங் வேலைகளும் மும்முரமாக நடந்து வருகின்றன.
இப்படத்தின் டீசர் பொங்கலுக்கு வரும், குடியரசு தினத்திற்கு வெளியாகும் என்று இணையத்தில் தொடர்ந்து அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியது. ஆனால் அந்நாளில் ரசிகர்கள் எதிர்பார்த்து ஏமாந்ததே மிஞ்சம்.இந்நிலையில் இப்படத்தின் டீசர் உருவாக்கும் பணிகள் தற்போதுதான் தொடங்கியுள்ளதாம்.
தெறி படம் தன்னுடைய 50வது படம் என்பதால் இப்படத்தின் இசைக்கு தனிகவனம் செலுத்தி வருகிறார் ஜி.வி.பிரகாஷ். இவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தெறி படத்தின் டீசர் பற்றிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் தெரிவித்திருப்பதாவது, தெறி டீசர் பணிகள் தொடங்கியது. விரைவில் டீசர் வெளியாகும். கொண்டாட்டம் ஆரம்பம்… என்று தெரிவித்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் இப்போதே கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.


