10 மணி நேரம் தண்ணீரில் மிதந்த ஹரிப்பிரியா திடீரென்று மூழ்கினார்

தென்னிந்திய திரையுலகில் முதல் டிஜிட்டல் வெற்றிப் படமான ‘சிலந்தி’ படத்தை இயக்கி டிஜிட்டல் புரட்சிக்கு வித்திட்ட இயக்குநர் ஆதிராஜன், தனது டிஜிட்டல் தியேட்டர்ஸ் படநிறுவனம் சார்பில் தயாரித்து எழுதி இயக்கி வரும், ஸ்டைலிஷான த்ரில்லர் படம் “அதர்வணம்”.

கன்னட திரையுலகின் சூப்பர்ஸ்டார்கள் சிவராஜ்குமார், புனித்ராஜ்குமார் ஆகியோரின் மைத்துனரும், 38 படங்களில் கதாநாயகனாக நடித்திருப்பவரும், சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்றவருமான விஜயராகவேந்திரா இப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் 28 படங்களில் நாயகியாக நடித்திருக்கும் ஹரிப்பிரியா, இதில் மாறுபட்ட வேடத்தில் கவர்ச்சியிலும் நடிப்பிலும் வெளுத்து வாங்கியுள்ளார். ஒரு குத்துப் பாடலுக்கு முன்னாள் நாயகி மேக்னாநாயுடு கவர்ச்சி ஆட்டம் போட்டு இருக்கிறார்.

ஹரிப்பிரியா நீச்சல் குளத்தில் விளையாடுவது போன்ற ஒரு காட்சி சமீபத்தில் பெங்களூர் புறநகர் பகுதியில் உள்ள ஒரு நீச்சல் குளத்தில் படமாக்கப்பட்டது. மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணி வரை நடைப்பெற்ற படப்பிடிப்பில், சுமார் 10 மணி நேரம் கடும் குளிரில் நீச்சல் உடையில் தண்ணீரில் மிதந்து நடித்துக் கொண்டிருந்தார். படப்பிடிப்பு முடியும் தருவாயில், 12 அடி ஆழம் உள்ள பகுதியில் நீந்திக் கொண்டிருந்த ஹரிப்பிரியா திடீரென்று தண்ணீரில் மூழ்கினார். மூச்சுத்திணறி தத்தளித்தார்.

விபரீதத்தை உணர்ந்த படக்குழுவினர் தண்ணீரில் குதித்து ஹரிப்பிரியாவை காப்பாற்றினர். பதட்டம் அடைந்த ஹரிப்பிரியாவின் அம்மா இயக்குனரிடம் கடும் வாக்குவாதம் செய்தார். இதனால் படப்பிடிப்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் ஹரிப்பிரியா, “தொடர்ந்து நீந்தியதாலும், கண்விழித்ததாலும் ஏற்பட்ட களைப்பினால் தான் தம் கட்ட முடியாமல் மூழ்கிவிட்டேன். இந்தப் படத்திற்காக நிறைய கஷ்டப்பட்டிருக்கிறேன். இரண்டு முறை ரத்தக்காயம் கூட ஏற்பட்டு விட்டது. என் உழைப்பிற்கு நிச்சயம் பலன் கிடைக்கும்” என்று கூறி அம்மாவை சமாதானப்பத்தியதுடன், மீண்டும் தண்ணீரில் நீந்தி மீதி காட்சியிலும் நடித்துக் கொடுத்தார்.

விறுவிறுப்பான திரைக்கதையுடன் சென்னை, பெங்களூர், மைசூர், கோவா, பகுதிகளில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் அதர்வணம் 95 சதவீதம் படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றது. எம்.கார்த்திக் இசையில், ராஜேஷ் கே.நாராயணன் ஒளிப்பதிவில், வி.ஜே.சாபுஜோசப்-ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில் உருவாகும் இந்தப் படத்தின் பாடல்களை நா.முத்துக்குமார், சினேகன், நெல்லைபாரதி, ஆதி ஆகியோர் எழுதியிருக்கின்றனர். ‘தாரைதப்பட்டை’ புகழ் ஐ.ராதிகா, கலைக்குமார் ஆகியோர் நடனம் அமைத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Topics

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Entertainment News

Popular Categories