10 மணி நேரம் தண்ணீரில் மிதந்த ஹரிப்பிரியா திடீரென்று மூழ்கினார்

தென்னிந்திய திரையுலகில் முதல் டிஜிட்டல் வெற்றிப் படமான ‘சிலந்தி’ படத்தை இயக்கி டிஜிட்டல் புரட்சிக்கு வித்திட்ட இயக்குநர் ஆதிராஜன், தனது டிஜிட்டல் தியேட்டர்ஸ் படநிறுவனம் சார்பில் தயாரித்து எழுதி இயக்கி வரும், ஸ்டைலிஷான த்ரில்லர் படம் “அதர்வணம்”.

கன்னட திரையுலகின் சூப்பர்ஸ்டார்கள் சிவராஜ்குமார், புனித்ராஜ்குமார் ஆகியோரின் மைத்துனரும், 38 படங்களில் கதாநாயகனாக நடித்திருப்பவரும், சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்றவருமான விஜயராகவேந்திரா இப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் 28 படங்களில் நாயகியாக நடித்திருக்கும் ஹரிப்பிரியா, இதில் மாறுபட்ட வேடத்தில் கவர்ச்சியிலும் நடிப்பிலும் வெளுத்து வாங்கியுள்ளார். ஒரு குத்துப் பாடலுக்கு முன்னாள் நாயகி மேக்னாநாயுடு கவர்ச்சி ஆட்டம் போட்டு இருக்கிறார்.

ஹரிப்பிரியா நீச்சல் குளத்தில் விளையாடுவது போன்ற ஒரு காட்சி சமீபத்தில் பெங்களூர் புறநகர் பகுதியில் உள்ள ஒரு நீச்சல் குளத்தில் படமாக்கப்பட்டது. மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணி வரை நடைப்பெற்ற படப்பிடிப்பில், சுமார் 10 மணி நேரம் கடும் குளிரில் நீச்சல் உடையில் தண்ணீரில் மிதந்து நடித்துக் கொண்டிருந்தார். படப்பிடிப்பு முடியும் தருவாயில், 12 அடி ஆழம் உள்ள பகுதியில் நீந்திக் கொண்டிருந்த ஹரிப்பிரியா திடீரென்று தண்ணீரில் மூழ்கினார். மூச்சுத்திணறி தத்தளித்தார்.

விபரீதத்தை உணர்ந்த படக்குழுவினர் தண்ணீரில் குதித்து ஹரிப்பிரியாவை காப்பாற்றினர். பதட்டம் அடைந்த ஹரிப்பிரியாவின் அம்மா இயக்குனரிடம் கடும் வாக்குவாதம் செய்தார். இதனால் படப்பிடிப்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் ஹரிப்பிரியா, “தொடர்ந்து நீந்தியதாலும், கண்விழித்ததாலும் ஏற்பட்ட களைப்பினால் தான் தம் கட்ட முடியாமல் மூழ்கிவிட்டேன். இந்தப் படத்திற்காக நிறைய கஷ்டப்பட்டிருக்கிறேன். இரண்டு முறை ரத்தக்காயம் கூட ஏற்பட்டு விட்டது. என் உழைப்பிற்கு நிச்சயம் பலன் கிடைக்கும்” என்று கூறி அம்மாவை சமாதானப்பத்தியதுடன், மீண்டும் தண்ணீரில் நீந்தி மீதி காட்சியிலும் நடித்துக் கொடுத்தார்.

விறுவிறுப்பான திரைக்கதையுடன் சென்னை, பெங்களூர், மைசூர், கோவா, பகுதிகளில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் அதர்வணம் 95 சதவீதம் படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றது. எம்.கார்த்திக் இசையில், ராஜேஷ் கே.நாராயணன் ஒளிப்பதிவில், வி.ஜே.சாபுஜோசப்-ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில் உருவாகும் இந்தப் படத்தின் பாடல்களை நா.முத்துக்குமார், சினேகன், நெல்லைபாரதி, ஆதி ஆகியோர் எழுதியிருக்கின்றனர். ‘தாரைதப்பட்டை’ புகழ் ஐ.ராதிகா, கலைக்குமார் ஆகியோர் நடனம் அமைத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தேசத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதிலேயே குறியாக இருக்கும் காங்கிரஸ்!

ஏற்கெனவே நீங்கள் அம்மணக்கட்டைகள் தான் என்பது தேசத்திற்கு நன்கு தெரியும். பிறகு உடைகளை அவிழ்த்துப் போட என்ன அவசியம்? 

ஆன்றோர்கள் தேசமடி பாப்பா

ஆன்மீகத்தை கையில் எடுத்தாலும் அதன்மூலம் சமூகநீதியை பரப்பிய ஸ்ரீ ராமானுஜரை தன் மடியில் வைத்துக் கொண்டாடிய தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.

பஞ்சாங்கம் பிப்.24 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

T20 WC2026: சூப்பர் 8 பிரிவில் சூப்பர் ஆட்டங்கள்

ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி சூப்ப்ர் 8 ஆட்டங்கள் 23.02.2026

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுதும்!

தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் இறுதி வாக்களார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  எஸ்ஐஆர் பணி முடிந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்

Topics

தேசத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதிலேயே குறியாக இருக்கும் காங்கிரஸ்!

ஏற்கெனவே நீங்கள் அம்மணக்கட்டைகள் தான் என்பது தேசத்திற்கு நன்கு தெரியும். பிறகு உடைகளை அவிழ்த்துப் போட என்ன அவசியம்? 

ஆன்றோர்கள் தேசமடி பாப்பா

ஆன்மீகத்தை கையில் எடுத்தாலும் அதன்மூலம் சமூகநீதியை பரப்பிய ஸ்ரீ ராமானுஜரை தன் மடியில் வைத்துக் கொண்டாடிய தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.

பஞ்சாங்கம் பிப்.24 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

T20 WC2026: சூப்பர் 8 பிரிவில் சூப்பர் ஆட்டங்கள்

ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி சூப்ப்ர் 8 ஆட்டங்கள் 23.02.2026

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுதும்!

தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் இறுதி வாக்களார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  எஸ்ஐஆர் பணி முடிந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories