பல மாசங்களுக்கு பிறகு வியாழன் (14.01.2016) அன்று இரவு முதல் நாள் காட்சி இந்த படத்தை என் இனிய நண்பர்கள் அன்பின் அழைப்பினால் காணப்பெற்றேன் ..
மதுரை புகழ் பாடும் பாடலுடன் டைட்டில் … முதல் காட்சி .. பாய்ந்து வரும் லாரி மற்றும் காருடன் பாலத்தின் நடுவில் நின்று கொண்டு …ஆட்களை ஏற்றி கொல்ல பணம் அளிக்கும் ஏழரை மூக்கனாக வில்லனாக மிரட்டும் சமுத்திரக்கனி!!
வீட்டை விற்று எல்லா புள்ளைகளுக்கு சொத்தை குடுக்க துடிக்கும் தாத்தாவாக அயங்க்காளை…ராஜ்கிரண் … இவரின் பேரன் சிவகார்த்திகேயன் … ரஜினி முருகன் .. அவரின் ஒரே வேலை தாதாவுக்கு மூணு வேலை சாப்பாடு கொண்டுவந்து கொடுப்பது .. அப்பறம் பொண்ணுங்களை சுற்றுவது.. அண்ணன் அமெரிக்காவில் இருந்து அனுப்பிய பணத்தை நலசங்க விழாவிற்கு மொய் வைத்து பெயர் வாங்கி விட்டு நண்பன் சூரியுடன் டான்ஸ் ஆடுவது
சூரி ..எப்போதும் போல ஆங்கில அறிவு குறைவான (அதையே எல்லா படத்திலும் வைத்திருப்பது) காட்சி அமைப்புடன் நடிப்பது அலுப்பு தட்டுகிறது..
கதாநாயகி …கீர்த்தி சுரேஷ் .. அன்றைய கால மேனகா (தலைவர் ரஜினி கூட நெற்றிக்கண் படத்தில் நடித்தவர் ) மகள் .. அவரை போலவே ஒரு பாந்தமான முகம் .. மதுரை என்பதால் படம் முழுதும் பாவாடை தாவணியில் வருகிறார்.. ..
மாட்டுத்தாவணி என்கிற பஸ்ஸ்டான்ட் மட்டும் மதுரையில் இருக்கு, அங்கே யாரு இப்போ இப்படி எப்போதும் தாவணி போட்டு கிட்டு இருக்காங்க என்று தெரியவில்லை !!
கதைகளம் வீட்டை விற்க பார்க்கும் தாத்தாவிற்கு கொடச்சல் குடுக்கும் வில்லன் ஏழரை மூக்கன் மற்றும் அவனை சமாளிக்கும் முருகன் ..
சிவகார்த்திகேயன் பாத்திரத்தை .. ஒரு சூப்பர் ஹீரோ போன்று ஒரே அடியில் ஆளுங்க வானத்தில் பறப்பது போல காட்டாமல் .. வீரமுள்ளவனாக எதார்த்தமாக, அப்பப்ப பயந்து இருப்பது போல காட்டி இருப்பது சிறப்பு ..
கதாநாயகிக்கு நிறைய வேலை இல்லை ..எல்லா காட்சியிலும் தாவணியில் வந்து.. சில க்ளோசப் காட்சிகளில் காமெராவை பார்த்துகிட்டே நடங்க என்று சொல்லி விட்டாங்க ..
மிக சிறந்த வில்லன் நடிப்பு சமுத்திரக்கனி ..
உடல் அமைப்பிலே அந்த கெத்து மற்றும் மிரட்டல் ..(வார்த்தையில் சவுண்ட் விட்டு நடிக்கும் நடிகர்கள் மத்தியில் இது புதுமை .. ) பஞ்சாயத்தில் இரக்கத்தை சம்பாரிக்க கண்ணீர் விட்டு பேசும் காட்சி அவரின் பல பரிமானங்கள் ஸ்டாக் இருப்பதை சொல்லுது ..
காட்சி அமைப்புகளில் .. கதாநாயகி வீட்டு வாசலில் காலையில் இருந்து மாலை வரை நிற்கும் காட்சிகள் .ஆமாம் whatsapp காலத்தில் இது என்ன மடமை ???
ஒரு பிளாஸ்பேக் ..
கதாநாயகனுக்கு பேர் வச்சதே கதாநாயகியின் தந்தை .. அவர் கதாநாயகனின் தந்தையின் உயிர் தோழன் .. சிறிய சண்டையில் அவர்கள் பிரிவால் .. என்று ஒரு ட்விஸ்ட் !!
படத்தில் நகைச்சுவை காட்சி.. ஆடி காரை வைத்து சிவாவும் சூரியும் செய்வதுதான் .. 200 ரூபாய் கடன் குடுக்க முடியாத டீ கடைகாரரிடம் ஷோரூம் இருந்து டெஸ்ட் டிரைவ் வண்டியை எடுத்துகிட்டு … அப்பா வந்த “ஆடி காரில் ஆராம்பாலயம் நான் போய் இருக்கேன் என்று சொல்லு “ என்கிற இடம் ..
கதாநாயகி வீட்டு வாசலில் ஒரு டீ கடை போட்டுக்கிட்டு அங்கிருந்து சினிமா பாடல் போட்டு (“மாமா உன் பொண்ணை கொடு) .. அசத்துவது .. அடிவாங்குவது ..
பாடல் மற்றும் பின்னணி இசை ..இமான் …
டைட்டிலில் ஓடும் மதுரை பற்றி ரெண்டு வரி பாடலில் தெரிந்து விடுகிறது .. அவரின் உழைப்பு .. அருமை ..
ரஜினி முருகன் ..கன் கன் .. பாடல் மற்றும் ..
என்னமா இப்படி பண்ணிரீறேன்களே மா!!…
பாடல்கள் படம் வரும் முன்னே சூப்பர் ஹிட் .. ஆமாம் ஏப்ரல் 2015 முடிஞ்சு ,, வெள்ளத்தாலே டிசம்பர் மாசம் இல்லாமல் 2016 பொங்கலுக்கு வந்தா??
ஏலா ஏலா .. என்று கதாநாயகனும் கதாநாயகியும் மன ஓட்டத்தை காட்டும் காட்சிகளில் ஒரு கிராமத்து இசை ஓடி மனதை கொள்ளை கொள்கிறது பின்னணி இசை !!
பாலசுப்ரமணியம் கேமரா ..
நல்ல ரிச்சா மதுரையை காண்பித்து இருக்கிறார் .. டைட்டில் கார்ட் புதுமையாக ப்ரீஸ் ஆனா படங்கள் த்ரீ டீ போல நகர்வது புதுமை .. மதுரை வீதிகளில் சிவகார்த்திகேயனை வைத்து படம் இரவில்தான் எடுக்க முடியும் என்பதால்.. உறங்காத அந்த நகரை இரவில் வெளிச்சம்போட்டு பாடல் காட்சிகள் எடுத்து இருக்கிறார் !!
ஒரு தனி நீதி பரிப்பாலனம் போன்று கிராமப்புற பஞ்சாயத்து பண்ணுவது பற்றி சொல்லி இருப்பது .. அதற்கு தனியாக காசு குடுத்த லாயர் மாறி பேசுவதற்கு ஆட்கள் இருப்பது பற்றி அழகாக நகைப்பாகவும் சொல்லிருப்பது அருமை ..
ரெண்டு முறை பஞ்சயாத்து ஆட்கள் பேசியும் சண்டை போட்டு ராஜ்கிரண் பட்டாப்பட்டி டவ்செர் தெரிய ஆள்கள் நெஞ்சில் உதைத்து .. அட போடா இந்த நீ குடுத்த லக்ஷம ரூபாய் என்று அவனிடம் கடைசியா குடுத்துதான் விரட்டி விட .. வில்லனை வென்று …
இது முன்பே சிவகார்த்திகேயன் நடித்த “வருத்தபடாத வாலிபர் சங்கம்” இரண்டாம் பாகம் என்பதாக சொல்லி முடித்து ..
பொங்கலுக்கு பாவாடை தாவணி போட்ட பொண்ணை அழகா காட்டி இருக்கிறார் (என் பழைய நினைவுகளை தூண்டிவிட்டது ..ம்ம்..ஸ் ).. .. கலகலப்பான காமடி இருக்கு .. முக்கியமாக வன்முறை இல்லை .. நிச்சியமாக அனைவரும் பார்க்கலாம் ..
விமர்சனம்: விஜயராகவன் கிருஷ்ணன்


