December 7, 2025, 6:07 AM
24 C
Chennai

5,8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!

madurai high court - 2025

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் லூயிஸ் என்பவர் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த தடைவிதிக்க வேண்டும் என வழக்கு ஒன்றை தொடந்தார்.

இந்த வழக்கில் நீதிபதிகள் பொதுத்தேர்வு தொடர்பாக மத்திய அரசும், தமிழக அரசும் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்து.மேலும் வழக்கை பிப்ரவரி 19-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வருடம் தமிழகத்தில் மாநில பாடதிட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வி துறை அறிவித்து உள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்களுக்கு பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என கல்வியாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

சமீபத்தில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பில் , கண்டிப்பாக இந்த வருடம் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என கூறினார்.இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் லூயிஸ் என்பவர் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த தடைவிதிக்க வேண்டும் என கோரி வழக்கு ஒன்றை தொடந்தார்.

அதில் ,பொதுத்தேர்வில் தோல்வியடையும் மாணவர்கள் அடுத்த 2 மாதங்களில் மறு தேர்வு எழுதி தேர்வு பெறலாம் என உள்ளது.அப்படி மறு தேர்வு எழுதும்போது மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் எனவும் , தரமான கல்விகள் உள்ள நாடுகளில் கூட இந்த பொதுத்தேர்வு இல்லை எனவே 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தடைவிதிக்க வேண்டும் எனவும் மேலும் அதுதொடர்ப்பன அரசாணை ரத்து செய்ய வேண்டும் என வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இன்று இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்றது .அப்போது வழக்கு தொடர்ந்தவர் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் இந்த தேர்வு முறை தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலங்களிலும் நடைமுறையில் இல்லை எனவே இந்த பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார்.

அதற்கு அரசு தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் மாணவர்களுக்கு அடிப்படை கல்வியை தரமானதாக தரவேண்டும் என்ற நோக்கிலே இந்த முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது என கூறினார்.மேலும் பொதுத்தேர்வில் தோல்வியடையும் மாணவர்களுக்கு அடுத்த 2 மாதங்களில் மறு தேர்வு நடைபெறும் என கூறினார்.

அதற்கு நீதிபதிகள் மறுத்தேர்விலும் மாணவர்கள் தேர்ச்சி பெறாவிட்டால் குழந்தைகளின் நிலை என்ன..? என்ற கேள்வியையும் உயர்நீதிமன்றக் கிளை எழுப்பியது.அதற்கு அரசு தரப்பில் மறுத்தேர்விலும் தேர்ச்சி பெறாதவர்கள் குறித்து அரசு முடிவு எடுக்கும் என கூறப்பட்டது.

பின்னர் நீதிபதிகள் 5 மற்றும் 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக மத்திய அரசும், தமிழக அரசும் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்து வழக்கை பிப்ரவரி 19-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories