பிறப்பு சான்றிதழில் குழந்தைகள் வயது 100, 102! லஞ்சம் தர மறுத்ததால் பழி வாங்கிய அதிகாரி!

babys - 2026

உத்தர பிரதேசத்தில், ரூ.1000 லஞ்சம் கொடுக்க மறுத்ததைத் தொடர்ந்து, கோபத்தில் குழந்தைகளின் வயதை 100, 102 ஆக குறிப்பிட்டு பிறப்புச் சான்றிதழ்களை வழங்கிய கிராம நிர்வாக அதிகாரி மறறும் கிராமத் தலைவர் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு பரேலி நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம் மிமாநிலம், பரேலி மாவட்டம் ஷாஜகான்பூரின் குத்தர் காவல் நிலைய எல்லைக்குள் வரும் பேலா கிராமத்தை சேர்ந்தவர் பவன்குமார். இவர், தன் மகன்களான சுப்(4), சங்கெட்(2) ஆகிய இருவருக்கும் பிறப்புச் சான்றிதழ் வேண்டி இரு மாதங்களுக்கு முன்பு, இணையம் மூலம் விண்ணப்பித்துள்ளார்.

இருவருக்கும் பிறப்பு சான்றிதழ் வழங்குவதற்காக, கிராம நிர்வாக அதிகாரி சுஷில் சந்த் அக்னிஹோத்ரி, கிராமத் தலைவர் பிரவீன் மிஸ்ராவும், பவன்குமாரிடம், ரூ.1000 லஞ்சம் கேட்டுள்ளனர். லஞ்சம் கொடுப்பதற்கு பவன்குமார் மறுத்துள்ளார்.

இதனால், கோபம் அடைந்த, கிராம நிர்வாத அதிகாரியும், கிராம தலைவரும், குழந்தைகளின் பிறந்த ஆண்டை, தங்கள் விருப்பத்திற்கு மாற்றம் செய்து, பிறப்புச் சான்றிதழ் அளித்துள்ளனர்.

அவர்கள் அளித்துள்ள சான்றிதழ்களின்படி, இரண்டு வயதான சங்கெட்டின் பிறந்த தேதி ஜூன் 13, 2018 க்கு பதிலாக ஜூன் 13, 1916 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று, நான்கு வயதான சுப்பின் பிறந்த தேதி ஜனவரி 6, 2016 க்கு பதிலாக ஜனவரி 6, 1918 என குறிப்பிடப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, குழந்தையின் தற்போதைய வயது 100 மற்றும் 102 ஆகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பவன்குமார், எனது மகன்களான சுப்(4), சங்கேத்(2) ஆகியோரின் பிறப்புச் சான்றிதழ்கள் தவறான பிறப்பு தேதியுடன் வழங்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். முடிவில், நீதிமன்ற உத்தரவை அடுத்து, கிராம நிர்வாக அதிகாரி மற்றும் கிராமத் தலைவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

Topics

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

Entertainment News

Popular Categories