பெண்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப கருக்கலைப்பு சட்டத்தில் மாற்றம்!

karu - 2026

கருக்கலைப்பு விஷயத்தில் முக்கியமான ஒரு சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவர முடிவு செய்துள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதலும் வழங்கியுள்ளது.

தற்போதை சட்டப்படி, 20 வாரங்களுக்கு பிறகு கருக்கலைப்பை அனுமதிக்க முடியாது. இந்த கால வரம்பை 24 வாரங்களுக்கு நீட்டிக்க சட்டத் திருத்தம் வகை செய்கிறது என்று, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.

மருத்துவ கருக்கலைப்பு (சட்டத் திருத்தம் 2020) என்று இதற்கு பெயர். Medical Termination of Pregnancy Act (1971) இதன் மூலம் திருத்தத்திற்கு உள்ளாகிறது.

கடந்த ஆண்டு, கருக்கலைப்பு காலத்தை நீட்டிக்கக் கோரி பொது நல வழக்கு தில்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்தபோது, ​​கர்ப்பிணிப் பெண்ணின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, கருக்கலைப்பு செய்யும் காலத்தை 20 வாரங்களிலிருந்து 24 வாரங்களுக்கு நீட்டிப்பது குறித்து அமைச்சகம் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளது என்று சுகாதார அமைச்சகம் நீதிமன்றத்தில் உறுதி அளித்தது.

சம்பந்தப்பட்ட அமைச்சகம் மற்றும் என்ஐடிஐ ஆயோக் ஆகியவற்றின் கருத்தை வாங்கிய பின்னர், கருக்கலைப்புச் சட்டத்தில் வரைவுத் திருத்தம் விரைவில் இறுதி செய்யப்படும் என்றும், பின்னர் அது சட்ட அமைச்சகத்திற்கு அனுப்பப்படும் என்றும் அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ALSO READ:  மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

மனுதாரரும் வழக்கறிஞருமான அமித் சாஹ்னி தாக்கல் செய்த பொதுநல மனு வழக்கில்தான், மத்திய அமைச்சகம் இந்த பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தது.

அமித் சாஹ்னி தனது மனுவில் கருக்கலைப்பு காலத்தை 20 வாரங்களிலிருந்து 24 வாரமாக அல்லது 26 வாரங்களாக உயர்த்த வேண்டும் என்று கூறியிருந்தார். இது தவிர, திருமணமாகாத பெண்கள் மற்றும் விதவைகளையும் கருக்கலைப்பு செய்ய சட்டப்பூர்வமாக அனுமதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

ஒரு பெண்ணுக்கு கருத்தரிக்க உரிமை இருப்பதைப் போலவே, கருக்கலைப்பு செய்வதற்கான உரிமையும் பெண்ணுக்கு இருக்க வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories