பிச்சைக்காரர்களுக்கு காசு கொடுக்காதீர்கள்: ஹைதராபாத்தில் பிரசார இயக்கம்!

சாலைகளில் நாம் சாதாரணமாகப் பார்க்கலாம். கையில், இடுப்பில் குழந்தைகளை இடுக்கிக் கொண்டு பெண்கள் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதை!

ஹைதராபாத் நகரில் மக்களிடம் அதிகாரிகள் இது போன்றவர்களுக்கு பிச்சை போடாதீர்கள் என்று ஒரு பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள். கிரேட்டர் ஹைதராபாத் முனிசிபல் கார்பரேஷன் அதிகாரிகளின் இப்போதைய முக்கியப் பணி இதுவாகத்தான் இருக்கிறது.

ஹைதராபாத் நகரில் பிச்சை எடுப்பவர்கள் குறித்து ஒரு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதில்,
14 ஆயிரம் பிச்சைக்காரர்கள் ஹைதரபாத்தில் உள்ளனர் என்றும், அவர்களில் 98% பேர் போலியானவர்கள் என்றும் தெரியவந்தது. அவர்களின் வருடாந்திர ஒட்டுமொத்த வருமானம் மட்டும் ரூ.24கோடியைத் தாண்டும் என்று தெரியவந்துள்ளது.

குழந்தைகள், உடல் ஊனமுற்றோர் ஒவ்வொரு நாளும் ரூ. 2 ஆயிரம் வரை சம்பாதிக்கிறார்கள் என்று சர்வே மூலம் தெரிய வந்துள்ளது.

ஹைதராபாத் நகரை பிச்சைக்காரர்களே இல்லாத நகரமாக மாற்றம் செய்யும் முயற்சியாக, ஹைதரபாத் நகரில் அதிகாரிகள் ஒரு மறுவாழ்வு மையத்தை தொடங்கியிருக்கிறார்கள். அதில், உண்மையாகவே வாழ வழியின்றித் தவிக்கும் பிச்சைக்காரர்கள் தங்கள் குறித்த விவரங்களுடன் பதிவு செய்து கொள்ளலாம். நகரின் என்.ஜி.ஓ.க்கள் மூலம் அவர்களுக்கான மறு வாழ்வு ஏற்பாடு செய்யப் படுகிறது. குழந்தைகள் பள்ளிகளுக்கு அனுப்பப் படுகிறார்கள். இளைஞர்களுக்கு மெக்கானிக் உள்ளிட்ட தொழில்களுக்கு வழிகாட்டப்படுகிறது. முதியவர்கள் ஹைதராபாத்தில் உள்ள முதியோர் மறுவாழ்வு இல்லங்களுக்கு அனுப்பப் படுவார்கள் என்கிறார்கள்.

எத்தனையோ பிரச்னைகளுக்காக பிச்சை எடுக்கிறார்கள். ஆனால், அவர்களில் பரிதாபப் பட வேண்டியவர்கள் மிகவும் குறைவு! அடுத்த முறை பிச்சை போடும் போது, நன்றாக நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் பிச்சை இடும் நபர் உங்களை விட பணக்காரராக இருப்பார் என்பதை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories