நாய்க்குட்டியை காப்பற்ற சென்ற சிறுமி.. 9 வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழப்பு!

apartments
apartments

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள கவி நகரை சேர்ந்தவர் லலித். இவர் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 9-வது மாடியில் வசித்து வருகிறார்.

இவரது மனைவி கிரண். இவர்களுக்கு 12 வயதில் ஜோத்னா சர்மா என்ற மகள் இருந்தார். நேற்று லலித் வேலைக்கு சென்று விட்டார். கிரண் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார்.

அப்போது ஜோத்னா தனது செல்லப் பிராணியான நாயுடன் பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்தார்.
பால்கனியில் உள்ள கிரில்லில் நாய் சிக்கிக் கொண்டது.

அந்த நாய் கீழே விழுந்து விடும் அபாயத்தில் இருந்தது. இதனால் சிறுமி ஜோத்னா தனது செல்லப்பிராணியை காப்பாற்ற முயன்றார். ஆனால் பரிதாபமாக அவர் 9-வது மாடியில் இருந்து தவறி விழுந்தார்.

இதில் அவர் ரத்த காயங்களுடன் உயிரிழந்தார். மாடியில் இருந்து விழுந்து நாயும் இறந்து போனது. நாயை காப்பாற்ற போய் 9-வது மாடியில் இருந்து விழுந்து சிறுமி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினர் உடற்கூராய்வு ஆய்வு அறிக்கையை வாங்குவதற்கும், காவல்துறையில் புகார் அளிப்பதற்கும் மறுத்துவிட்டனர்.

இதுகுறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், ‘இது விபத்து’ என்று தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தெரிவித்த காவல்துறையினர், ’12 வயது சிறுமி ஜோத்னா சர்மா, அவரது அறையில் 5 மாத நாய்க்குட்டியுடன் விளையாடிக்கொண்டிருந்துள்ளார்.

அறையிலிருந்து வெளியே ஓடிய நாய்க்குட்டி பால்கனியிலுள்ள கிரில் கேட்டில் மாட்டியுள்ளது. உடனே, பால்கனி சுவரில் ஏறி நாயைக் காப்பாற்ற முயற்சி செய்துள்ளார்.

புறா போன்ற பறவைகள் வீட்டுக்குள் வந்துவிடாமல் தடுப்பதற்காக போடப்பட்டிருந்த நைலான் நெட்டை ஒரு கையால் பிடித்துக்கொண்டு மற்றொரு கையால் நாயைப் பிடித்து இழுக்க முயற்சி செய்துள்ளார்.

நைலான் நெட் அந்தச் சிறுமியின் எடையை தாங்காமல் பிய்ந்துவிட்டது. பால்கனியில் சில விநாடிகள் தொங்கிக் கொண்டிருந்த சிறுமி காப்பற்றுவதற்கு குரல் எழுப்பியுள்ளார். அவர், ஒரு கையால் நாயின் தலையை பிடித்துக் கொண்டிருந்தார். சமையலறையிலிருந்து அவரது அம்மா வருவதற்குள் தவறி கீழே விழுந்துவிட்டார்.

நாயும், சிறுமியும் 9-வது மாடியிலிருந்து கீழே விழுந்தனர். நாய் கீழே விழுந்த உடன் உயிரிழந்துவிட்டது. உயிருக்குப் போராடிய சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். வரும் வழியில் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்’ என்று தெரிவித்தார்.

ALSO READ:  திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories