போர்க்களத்தில் நடத்துவோம் பேச்சுவார்த்தையை! : கௌதம் காம்பிர் ஆவேசம்!

Published:

gauatam gambir - 2026

காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் நேற்று பாகிஸ்தான் ஆதரவு பெற்ற இஸ்லாமிய பயங்கரவாத இயகமான ஜெய்ஷ் இ மொஹம்மத் பயங்கரவாதிகள், இந்திய ரணுவத்தினர் மீது சுமார் 350 கிலோ வெடிமருந்துப் பொருள்களுடன் திடீர் தாக்குதல் நடத்தியதில், இந்திய ராணுவ வீர்ர்கள் 40க்கும் மேற்பட்டோர் வீரமரணம் அடைந்தனர்.

இந்தச் சம்பவத்துக்கு உலகெங்கிலுமிருந்தும் கண்டனங்கள் வலுத்துள்ளன. பொதுமக்கள் ஆவேசத்துடன் பொங்கி எழுந்து பயங்கரவாதிகளுக்கு எதிரான கோபத்தை வெளிப்படுத்தியுள்ளன்ர்.

இந்நிலையில் கிரிக்கெட் வீரர் கௌதம் காம்பிர் ஆவேசத்துடன் கூறியுள்ள கருத்து இது….

”ஆம், பிரிவினைவாதிகளுடன் பேசுவோம். ஆம், பாகிஸ்தானுடனும் பேசலாம். ஆனால் பேச்சுவார்த்தை, மேசையைச் சுற்றி இருக்கக் கூடாது. போர்க்களத்தில்தான் இருக்க வேண்டும். இதுவரை பொறுத்தது போதும். ஸ்ரீநகர் – ஜம்மு நெடுஞ்சாலையில் நடந்த குண்டுவெடிப்பில் சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img