வயநாடு பகுதியில் மாவோயிஸ்டு சுட்டுக் கொலை; இருவர் தப்பியோட்டம்!

Published:

maoist killed kerala - 2026

வயநாடு : கேரளாவின் வயநாடுவை அடுத்த வைத்திரி பகுதியில் ரிசார்ட் ஒன்றில் மாவோயிஸ்டுகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.

நேற்று இரவு 8 மணிக்கு, உபவன் ரிசார்ட்டிற்குள் புகுந்த மாவோயிஸ்டுகள் அங்கிருந்தவர்களை சிறைப் பிடித்து வைத்தனர். இந்தத் தகவல் அறிந்து ரிசார்ட்டுக்குச் சென்ற பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இன்று அதிகாலை 4.30 வரை துப்பாக்கிச் சண்டை நடந்ததாகவும், இதில் படுகாயம் அடைந்த மாவோயிஸ்டுகள் இருவர் அங்கிருந்து தப்பி ஓடியதாகவும் கூறப்படுகிறது. இன்று காலை அந்த இடத்தை சோதனை நடத்தியபோது, மாவோயிஸ்ட் ஒருவர் கொல்லப்பட்டிருந்தது தெரியவந்தது.

இந்நிலையில், காயமடைந்த மாவோயிஸ்டுகள் சிகிச்சை பெறுவதற்காக வர வாய்ப்புள்ளதால் தமிழக – கேரள எல்லையில் உள்ள மருத்துவமனைகளில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img