ஆந்திராவில் திருப்பதி வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டிக் கடத்தியதாகக் கூறி 20 தமிழர்களை ஆந்திர மாநில சிறப்பு அதிரடிப்படை போலீஸார் என்கவுன்டர் என்று கூறி சுட்டுக் கொன்றனர். அவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்ட 20 பேரும் அப்பாவிகள் என்றும், ஆந்திர போலீஸார் திட்டமிட்டே இந்த என்கவுன்டரை அறங்கேற்றியுள்ளனர் என்றும் பிரச்னைகள் எழுந்துள்ள நிலையில், சுட்டுக் கொல்லப்பட்ட 20 பேரின் செல்போன் எண்கள் சோதனை செய்யப்பட்டன. அதில், ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்களின் எண்கள் அவற்றில் இருப்பது தெரிய வந்தது. மேலும் செம்மரம் வெட்ட தொழிலாளர்களை அழைத்துச் செல்லும் 16 ஏஜெண்டுகளும் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் ஆந்திர போலீசார் நான்கு இடங்களில் சோதனை நடத்தினர். இதில் செம்மரங்களைப் பதுக்கி வைத்த சவுந்தரராஜன் என்பவரை ஆந்திரா போலீஸார் கைது செய்தனர். வெட்டிக் கொண்டு வரப்படும் செம்மரங்களை சவுந்தரராஜன் சென்னையில் உள்ள கடத்தல்காரர்கள் மூலம் பெற்று சீனா, பர்மா மற்றும் தென் கிழக்கு நாடுகளுக்கு அனுப்பிவைப்பார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சித்தூருக்கு அழைத்துச் செல்லப்பட்ட சவுந்தரராஜனிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் 2 பேருக்கு செம்மரங்கள் கடத்தலில் நேரடித் தொடர்பு இருப்பதாக தகவல் தெரியவந்தது. இதையடுத்து அந்த இரு முன்னாள் அமைச்சர்கள் பற்றி ஆந்திர மாநில சிறப்பு அதிரடிப்படை போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த அந்த முன்னாள் அமைச்சர் வட மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. அது உறுதிப் படும் பட்சத்தில், ஆந்திர போலீசார் அவரைக் கைது செய்யக்க்கூடும் என்று கூறப் படுகிறது.
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
இந்தியா
அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,
RSS condemns Ram temple donation theft, urging strict action and patience from the community during this challenging time.
நெல்லை
திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!
தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .
அரசியல்
கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!
கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!
ஆன்மிகச் செய்திகள்
திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!
சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
இந்தியா
அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,
RSS condemns Ram temple donation theft, urging strict action and patience from the community during this challenging time.
நெல்லை
திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!
தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .
அரசியல்
கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!
கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!
ஆன்மிகச் செய்திகள்
திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!
சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
விளையாட்டு
FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!
இரண்டாம் சுற்றான ரவுண்ட் 32 ஜூன் 28ஆம் தேதி தொடங்கி, ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 03 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
சென்னை
ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!
ஏ.வி.ஆர் ஸ்வாமியின் மறைவு ஒரு பொற்காலத்தின் முடிவைக் குறிக்கிறது. தில்லை திருச்சித்ரகூடமான சிதம்பரம் திருத்தலத்திற்கு அவர் ஆற்றிய கைங்கரியங்களும் அவரது நூல்களும் என்றும் நிலைத்து நின்று நல்வழிப்படுத்தும்.

