எச்டிஎப்சி வங்கி வட்டிவீதம் குறைப்பு: வீட்டுக் கடன், வாகன கடன் ஈஎம்ஐ ‘கொஞ்சம்’ குறையும்!

Published:

hdfc bank - 2026

ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைத்ததை அடுத்து, எச்டிஎப்சி வங்கி MCLR வட்டி விகிதத்தை ஏப்.8 முதல் குறைப்பதாக அறிவித்துள்ளது.

எச்எடிஎப்சி வங்கியின் இந்த முடிவால் வீட்டுக் கடன், வாகனக் கடன் மற்றும் தனிநபர் கடன் திட்டங்கள் மீதான ஈஎம்ஐ குறையும். புதிதாகக் கடன் பெறுபவர்கள் மட்டுமல்லாமல் ஃப்ளோட்டிங் ரேட்டில் (மிதவை கடன் திட்டம்) கீழ் பெற்ற கடனுக்கும் ஈஎம்ஐ குறையும்.

எச்டிஎப்சி வங்கியில் 8.75 சதவீதமாக இருந்த வந்த MCLR வட்டி விகிதம் தற்போது 0.10 சதவீதம் குறைக்கப் பட்டு, 8.65 சதவீதம் ஆகியுள்ளது. அதே போல், ஆறு மாத, மூன்று மாத, ஒரு மாத அளவீடுகளிலும் குறைக்கப் பட்டு, அவை முறையே. 8.45%, 8.35%, 8.30% என இருக்கும்.

இதே போல் மற்ற வங்கிகளின் வட்டி சதவீதங்களும் குறைக்கப் பட்டுள்ளன.

கடந்த ஏப்.4ஆம் தேதி, ரிசர்வ் பாங்கின் நடப்பு நிதியாண்டுக்கான் அமுதல் நாணய கொள்கைக் கூட்டம் நடந்தது.அதில் ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப் பட்டு, 6 சதவீதமாகவும், நடப்பு ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 5.75 சதவீதமாகவும் அறிவிக்கப்பட்டது.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவ நான்காம் நாளில்..!

இதனையடுத்து வங்கி நிறுவனங்கள் கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தைக் குறைத்து வருகின்றன.

கடந்த ஏப்.2ஆம் தேதி ஐசிஐசிஐ வங்கியும் முன்னதாக MCLR வட்டி விகிதத்தை 0.05 சதவீதம் குறைத்து அறிவித்திருந்தது! அதன்படி 8.5%, 3மாதங்களுக்கு 8.55% 6 மாதங்களுக்கு 8.7% மற்றும் ஒரு வருடத்துக்கானது 8.75% என்று ஆனது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img