ஹைதராபாத்: அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க தாமதம் செய்தது ஏன் என்று காங்கிரஸுக்கு கேள்வி எழுப்பியுள்ளார் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு. தேசத்தின் முக்கிய அடையாளங்களான சுபாஷ் சந்திரபோஸ், சர்தார் பட்டேல், பிஆர் அம்பேத்கர் ஆகியோருக்கு காங்கிரஸ் எப்படி மதிப்பளித்தது என்பது தெரிகிறதே என்று அவர் கூறியுள்ளார். பட்டேல், நாட்டின் முதல் உள்துறை அமைச்சராக இருந்து நாட்டை ஒருங்கிணைத்தவர். அம்பேத்கர் சமூகத்தின் கீழ் மட்டத்திலிருந்தவர்களுக்கும் ஏழைகளுக்கும் சட்டத்தின் மூலமான பாதுகாப்பை உறுதி செய்தவர் என்று கூறினார் வெங்கய்ய நாயுடு. அம்பேத்கர் பிறந்த நாளை ஒட்டி, பாஜக மாநிலத் தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய வெங்கய்ய நாயுடு இவ்வாறு கருத்து தெரிவித்தார். மேலும், இத்தகையவர்களுக்கு நம் சமூகம் என்ன செய்தது? ஆட்சியில் இருந்தவர்கள் அம்பேத்கர், நேதாஜி, பட்டேலுக்கு உரிய மரியாதையைத் தரவில்லை. இதைச் சொன்னால் அவர்கள் கோபப் படலாம். ஆனால், இதைச் சொல்ல நமக்கு பயம் எதுவுமில்லை என்று கூறினார். டாக்டர் அம்பேத்கருக்கு எப்போது பாரத ரத்னா விருது கொடுக்கப்பட்டது? அதற்கு எத்தனை வருடங்கள் பிடித்தன? அடுத்து, அவருடைய படம் நாடாளுமன்றத்தில் இடம்பெற எத்தனை வருடங்கள் ஆகின? என்று கேள்வி எழுப்பிய நாயுடு, 1953ல் உஸ்மேனியா பல்கலை அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியதை நினைவு கூர்ந்தார். நேதாஜி குடும்பத்தினர் உளவு பார்க்கப்பட்ட விவகாரத்தில், காங்கிரஸைச் சாடிய நாயுடு, எத்தனை காலத்துக்குத்தான் உண்மையை மூடி மறைக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார். டாக்டர் அம்பேத்கரின் கொள்கைகளை மத்திய அரசு பின்பற்றும் விதம் குறித்துப் பேசிய நாயுடு, மத்திய அரசின் திட்டங்களான, ஜன் தன் யோஜனா, முத்ரா வங்கி, ஸ்வாச்ச பாரத் திட்டம், அனைவருக்குமான வீடு வழங்கும் திட்டம் உள்ளிட்டவை எல்லாம் சமூகத்தின் ஏழை மக்களின் வளர்ச்சிக்கானது என்று கூறினார்.
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
லைஃப் ஸ்டைல்
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
ஆன்மிகக் கட்டுரைகள்
ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!
வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
லைஃப் ஸ்டைல்
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
ஆன்மிகக் கட்டுரைகள்
ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!
வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
சற்றுமுன்
ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்
ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...
சற்றுமுன்
ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!
ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...
Entertainment News
Previous article
Next article

