ஹைதராபாத்: அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க தாமதம் செய்தது ஏன் என்று காங்கிரஸுக்கு கேள்வி எழுப்பியுள்ளார் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு. தேசத்தின் முக்கிய அடையாளங்களான சுபாஷ் சந்திரபோஸ், சர்தார் பட்டேல், பிஆர் அம்பேத்கர் ஆகியோருக்கு காங்கிரஸ் எப்படி மதிப்பளித்தது என்பது தெரிகிறதே என்று அவர் கூறியுள்ளார். பட்டேல், நாட்டின் முதல் உள்துறை அமைச்சராக இருந்து நாட்டை ஒருங்கிணைத்தவர். அம்பேத்கர் சமூகத்தின் கீழ் மட்டத்திலிருந்தவர்களுக்கும் ஏழைகளுக்கும் சட்டத்தின் மூலமான பாதுகாப்பை உறுதி செய்தவர் என்று கூறினார் வெங்கய்ய நாயுடு. அம்பேத்கர் பிறந்த நாளை ஒட்டி, பாஜக மாநிலத் தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய வெங்கய்ய நாயுடு இவ்வாறு கருத்து தெரிவித்தார். மேலும், இத்தகையவர்களுக்கு நம் சமூகம் என்ன செய்தது? ஆட்சியில் இருந்தவர்கள் அம்பேத்கர், நேதாஜி, பட்டேலுக்கு உரிய மரியாதையைத் தரவில்லை. இதைச் சொன்னால் அவர்கள் கோபப் படலாம். ஆனால், இதைச் சொல்ல நமக்கு பயம் எதுவுமில்லை என்று கூறினார். டாக்டர் அம்பேத்கருக்கு எப்போது பாரத ரத்னா விருது கொடுக்கப்பட்டது? அதற்கு எத்தனை வருடங்கள் பிடித்தன? அடுத்து, அவருடைய படம் நாடாளுமன்றத்தில் இடம்பெற எத்தனை வருடங்கள் ஆகின? என்று கேள்வி எழுப்பிய நாயுடு, 1953ல் உஸ்மேனியா பல்கலை அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியதை நினைவு கூர்ந்தார். நேதாஜி குடும்பத்தினர் உளவு பார்க்கப்பட்ட விவகாரத்தில், காங்கிரஸைச் சாடிய நாயுடு, எத்தனை காலத்துக்குத்தான் உண்மையை மூடி மறைக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார். டாக்டர் அம்பேத்கரின் கொள்கைகளை மத்திய அரசு பின்பற்றும் விதம் குறித்துப் பேசிய நாயுடு, மத்திய அரசின் திட்டங்களான, ஜன் தன் யோஜனா, முத்ரா வங்கி, ஸ்வாச்ச பாரத் திட்டம், அனைவருக்குமான வீடு வழங்கும் திட்டம் உள்ளிட்டவை எல்லாம் சமூகத்தின் ஏழை மக்களின் வளர்ச்சிக்கானது என்று கூறினார்.
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
விளையாட்டு
FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!
இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.
உலகம்
IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!
16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
விளையாட்டு
FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!
இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.
உலகம்
IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!
16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
மதுரை
எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!
மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.
ஆன்மிகச் செய்திகள்
சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!
அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
Entertainment News
Previous article
Next article

