விவசாய நிலங்கள் தனியார் நிறுவனங்களுக்கு தரப்படாது; விவசாயப் பணிகளுக்கே! : அமித் ஷா

புது தில்லி: விவசாயிகளின் நிலங்கள் தனியார் நிறுவனங்களுக்கு தரப்படாது, அவற்றை நிச்சயமாக மத்திய அரசு தனியார் நிறுவனங்களுக்கு அளிக்காது; அவை விவசாயம் சார்ந்த பணிகளுக்கே எடுக்கப்படும் என்று பா.ஜ.க., தேசியத் தலைவர் அமித்ஷா கூறினார். பீகாரில் இந்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால், அனைத்து கட்சிகளுமே அங்கு வெற்றி பெற போட்டி போடுகின்றன. அனைத்து ஜனதா கட்சிகளையும் இணைத்து ஜனதா பரிவார் என போட்டியிட நிதிஷ், லாலு, முலாயம் ஆகியோர் முடிவு செய்துள்ளனர். பாஜகவும் தன் பங்குக்கு ஆட்சியைப் பிடிக்க முயற்சி செய்கிறது. இந்நிலையில், நிலம் கையகப் படுத்தும் மசோதா தொடர்பான எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தை முறியடிக்கும் வகையில், தங்கள் தரப்பு பிரசாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக நேற்று தில்லி காந்தி மைதானத்தில் பாஜக., தொண்டர்கள் மத்தியில் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோர் பேசினர். அந்தக் கூட்டத்தில் அமித் ஷா பேசியபோது, விவசாய நிலங்கள் தனியார் நிறுவனங்களுக்கு அளிப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று பிரசாரம் செய்து, எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துகின்றன. விவசாயிகளின் ஒரு அங்குல நிலம்கூட தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட மாட்டாது. இந்த நிலம் கிராமங்களின் மேம்பாட்டுக்காகவும், விவசாயிகளின் நிலங்களுக்கு தண்ணீர் வழங்குவதற்காகவுமே பயன்படுத்தப்படும். எதிர்க் கட்சிகளின் பிரசாரத்தை முறியடிக்க பாஜக., தொண்டர்கள் இந்தத் தகவல்களை ஒவ்வொரு கிராமத்தில் உள்ள விவசாயிகளிடமும் கொண்டு சேர்க்க வேண்டும். பீகாரில் 12 சர்க்கரை ஆலைகளுக்குச் சொந்தமான நிலங்கள் எங்கே சென்றன என்பதை முதல்வர் நிதிஷ் குமார் விளக்க வேண்டும். ஆனால் அவரோ இந்த விஷயத்தில் தொடர்ந்து மௌனமாக இருந்து வருகிறார். அந்த நிலங்களை அவர் தனது நண்பர்களுக்கும், அமைச்சர்களின் உறவினர்களுக்கும் வழங்கியுள்ளார். இதனால் பீகார் மாநில மேம்பாட்டுக்கான ரயில்வே மற்றும் சாலைத் திட்டங்கள் முடங்கியுள்ளன என்றார்.

ALSO READ:  ஐபிஎல் 2026: சஞ்சு சாம்சனால் தேறும் சென்னை அணி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories