இலங்கைக்கு அமைதிப் படையை அனுப்பியது உச்சபட்ச கொள்கைத் தோல்வி : வி.கே.சிங்

VKSingh ராய்புர்: கடந்த 1987ல் இலங்கைக்கு ஐபிகேஎஃப் – இந்திய அமைதிப் படையை அனுப்பியது, நமது உச்சபட்ச கொள்கை அளவிலான தோல்வி என்று குறிப்பிட்டார் வெளியுறவுத் துறை இணை அமைச்சரும் ராணுவ முன்னாள் தலைமைத் தளபதியுமான வி.கே.சிங். உத்தரகண்ட் மாநிலம் ராய்ப்பூரில், செவ்வாய்க்கிழமை நேற்று நடைபெற்ற “தைரியமும், தண்டனையும்´ என்ற தனது சுயசரிதை தொடர்பான நிகழ்ச்சியில் வி.கே.சிங் பேசியபோது குறிப்பிட்டது… விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையிலான போரில், இலங்கை அரசுடனான உடன்படிக்கையின் மூலம் இந்தியா நுழைந்தது. இது, நமது கொள்கை ரீதியில் ஏற்பட்ட உச்ச பட்ச தோல்வி. இந்திய அமைதிப் படையால் விடுதலைப் புலிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தன. அமைதிப்படைக்கு ஏற்பட்ட இந்தத் தோல்வி, இந்திய ராணுவத்தால் அமைதியை ஏற்படுத்த முடியாமல் போனதுதான்… மேலும், அமைதியை ஏற்படுத்த முடியாமல், இந்திய ராணுவமே போரில் சிக்கிக் கொண்டது. இலங்கையில், விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை பலமுறை நெருங்கியபோதும், ஒவ்வொரு முறையும் ஒரு கட்டளைகள் வந்து, அவர் தப்பிச் செல்வதற்கான பாதுகாப்பான பாதையை ஏற்படுத்திக் கொடுத்தன… என்று கூறினர் வி.கே.சிங். அதே நேரம் அப்போதைய இலங்கை அதிபர் ரனசிங்க பிரேமதாச, விடுதலைப் புலிகளுக்கு, இந்திய அமைதிப் படையை எதிர்ப்பதற்கு பலவிதங்களில் உதவினார் என்றும் கூறினார் வி.கே.சிங்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலியான...

பஞ்சாங்கம் ஏப்ரல் 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.

Topics

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலியான...

பஞ்சாங்கம் ஏப்ரல் 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.

‘மகளிருக்கும் தமிழருக்கும்’ கொடுத்தார் மோடி; கெடுத்தார் ஸ்டாலின்! 

இதில் இருந்தே, இந்த மசோதாவை எதிர்ப்பதில் திமுக., எவ்வளவு தீயாய் வேகம் காட்டியிருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவரும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

Entertainment News

Popular Categories