பெட்ரோல், டீசல் விலை குறைவு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது

பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை குறைந்தது. இந்த விலைக் குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

இந்த மாதத்தில், கடந்த 2 ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்ட நிலையில், இரண்டாவது முறையாக, நேற்று பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்தன. பெட்ரோல் விலை (உள்ளூர் வரிகளை கணக்கிடாமல்) லிட்டருக்கு 80 காசு குறைக்கப்பட்டது. டீசல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் 30 காசு குறைக்கப்பட்டது. இந்த விலைக் குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. விலைக் குறைப்புக்கு ஏற்ப உள்ளூர் வரிகளும் குறைந்ததால், நகரங்களுக்கு ஏற்ப விலை வேறுபட்டது. சென்னையில், பெட்ரோல் லிட்டர் ரூ.62.75 ல் இருந்து, 85 காசு குறைந்து ரூ.61.90 க்கு விற்கப்படுகிறது. தில்லியில் 80 காசு குறைந்து, ரூ.59.20 க்கும், கொல்கத்தாவில், 67 காசு குறைந்து, ரூ.66.81 க்கும், மும்பையில் 84 காசு குறைந்து, ரூ.61.69 க்கும் விற்பனை ஆனது. சென்னையில் ரூ.51.61 ஆக இருந்த ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.1.40 விலை குறைந்து, ரூ.50.21க்கும், தில்லியில், ரூ.1.30 குறைந்து ரூ.47.20 க்கும். கொல்கத்தாவில் ரூ.1.15 குறைந்து, ரூ.52.08க்கும், மும்பையில் ரூ.1.43 குறைந்து ரூ.54.26க்கும் விற்பனை ஆனது. “கடந்த முறை விலை குறைக்கப்பட்ட பின்னர், சர்வதேச சந்தையில் பெட்ரோல், டீசல் விலை குறைந்தது. ரூபாயின் மதிப்பு உயர்ந்தது. இதனால் ஏற்பட்ட பலனை நுகர்வோருக்கு அளிக்க, இந்த விலை குறைப்பு அமல்படுத்தப்படுகிறது” என்று இந்திய எண்ணெய்க் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ALSO READ:  ஐபிஎல் 2026: சஞ்சு சாம்சனால் தேறும் சென்னை அணி!

தற்போதைய செய்திகள்

petrol-diesel

பெட்ரோல், டீசல் விலை குறைவு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது

இந்தியா, சற்றுமுன்

பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை குறைந்தது. இந்த விலைக் குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இந்த மாதத்தில், கடந்த 2 ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்ட நிலையில், இரண்டாவது…

 

 

ALSO READ:  ஐபிஎல் - 2026: கலக்கும் இளம்புயல் சூர்யவன்ஷி

கார் டயர் வெடித்து மரத்தில் மோதி விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

 

 

 

 

சி.பி.எஸ்.இ. நெட் தகுதித் தேர்வு அறிவிப்பு

ALSO READ:  மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

 

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!

இரண்டாம் சுற்றான ரவுண்ட் 32 ஜூன் 28ஆம் தேதி தொடங்கி, ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

பஞ்சாங்கம் ஜூலை 03 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

ஏ.வி.ஆர் ஸ்வாமியின் மறைவு ஒரு பொற்காலத்தின் முடிவைக் குறிக்கிறது. தில்லை திருச்சித்ரகூடமான சிதம்பரம் திருத்தலத்திற்கு அவர் ஆற்றிய கைங்கரியங்களும் அவரது நூல்களும் என்றும் நிலைத்து நின்று நல்வழிப்படுத்தும்.

Entertainment News

Popular Categories