சென்னை :
அண்ணா பல்கலைக் கழகத்தில் இன்று நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவைப் புறக்கணிக்க 424 பேராசிரியர்கள் முடிவு செய்துள்ளனர். துணை வேந்தர் நியமிக்கப்படாமல் பட்டமளிப்பு விழா நடத்துவதற்கு பேராசிரியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அண்ணா பல்கலைக் கழகத்திற்கு துணை வேந்தரை நியமிக்கக்கோரி மேல் முறையீடு செய்வோம் என்று பேராசிரியர்கள் அறிவித்துள்ளனர்.
முன்னதாக, துணை வேந்தர் இல்லாமல் பட்டமளிப்பு விழாவை நடத்தக்கூடாது என்று கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.