ஜிஎஸ்டி.,க்கு எதிர்ப்பு: மே 30ல் உணவகங்கள் மூடல்!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Published:

gst - 2026

சென்னை:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மே 30 ஆம் தேதி தமிழகத்தில் உணவகங்கள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஜூன் மாதம் 1 ஆம் தேதியில் இருந்து, ஜிஎஸ்டி., வரி விதிப்பு முறை அமல்படுத்தப் படவுள்ளது. இந்த வரி விதிப்பின் மூலம் விலைவாசியில் மாற்றம் ஏற்படும். உணவகங்களில் உணவு விலைகளில் மாற்றம் ஏற்படும். ஏசி.,யுடன் கூடிய உணவகங்களில் விலை அதிகமாகும். இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு உணவகங்களின் சங்கத் தலைவர் வெங்கடசுப்பு, ‘ஜிஎஸ்டி., வரி விதிப்பினால் உணவுகளின் விலை கடுமையாக உயரும். மத்திய அரசு இதனைக் கருத்தில்கொள்ள வேண்டும். ஜி.எஸ்.டி வரி விதிப்புக்கு எதிராக மே 30ஆம் தேதி மாநிலம் முழுவதும் கடை அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது. அதன்பின்னர் ஜூன் 3ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் ஆலோசித்து தொடர் போராட்டம் நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும்’ என்றார்.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

Related articles

Recent articles

spot_img