
சென்னை:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மே 30 ஆம் தேதி தமிழகத்தில் உணவகங்கள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஜூன் மாதம் 1 ஆம் தேதியில் இருந்து, ஜிஎஸ்டி., வரி விதிப்பு முறை அமல்படுத்தப் படவுள்ளது. இந்த வரி விதிப்பின் மூலம் விலைவாசியில் மாற்றம் ஏற்படும். உணவகங்களில் உணவு விலைகளில் மாற்றம் ஏற்படும். ஏசி.,யுடன் கூடிய உணவகங்களில் விலை அதிகமாகும். இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு உணவகங்களின் சங்கத் தலைவர் வெங்கடசுப்பு, ‘ஜிஎஸ்டி., வரி விதிப்பினால் உணவுகளின் விலை கடுமையாக உயரும். மத்திய அரசு இதனைக் கருத்தில்கொள்ள வேண்டும். ஜி.எஸ்.டி வரி விதிப்புக்கு எதிராக மே 30ஆம் தேதி மாநிலம் முழுவதும் கடை அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது. அதன்பின்னர் ஜூன் 3ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் ஆலோசித்து தொடர் போராட்டம் நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும்’ என்றார்.


