குடியரசுத் தலைவர் தேர்தலில் மீரா குமாருக்கு ஆதரவு திரட்டுவோம்: மு.க.ஸ்டாலின்

MK-Stalin-warns-BJP

சென்னை:
குடியரசுத் தலைவர் தேர்தலில் மீரா குமாருக்கு ஆதரவு திரட்டுவோம் என்று கூறிய திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக போட்டியிடும் மீரா குமார் வெற்றிபெற திமுக சார்பில் வாழ்த்துகள் என்றும் கூறினார்.

திமுக., செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆழ்வார்பேட்டை இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசியது..

  • எதிர் கட்சிகளின் சார்பில் நடந்த கூட்டத்தில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக மீராகுமார் அறிவிக்கப்பட்டு இருக்கிறாரே…

அந்தக் கூட்டத்தில் திமுக சார்பில், திமுக நாடாளுமன்ற குழுவின் தலைவர் கனிமொழி எம்.பி., கலந்து கொண்டார். குடியரசுத் தலைவருக்கான வேட்பாளர் குறித்து திமுக எந்த உணர்வுடன் இருந்ததோ, அதேபோன்ற வேட்பாளர் அறிவிக்கப்பட்டு இருக்கிறார். அவர் வெற்றிபெற வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

  • பாஜக சார்பில் ஒரு தலித் வேட்பாளர் நிறுத்தப்பட்டு இருக்கிறாரே?
ALSO READ:  பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு!

எதிர்க் கட்சிகளுடன் கலந்து பேசி, அதன் பிறகு தான் குடியரசுத் தலைவர் வேட்பாளரை நாங்கள் முடிவு செய்வோம் என்று பாஜக வெளிப்படையாக தெரிவித்துக் கொண்டிருந்தது. ஆனால், அதனை செயல் வடிவத்துக்குக் கொண்டு வரவில்லை. ஒப்புக்காக ஒரு நாடகத்தை நடத்தினார்களே தவிர, இவர் தான் வேட்பாளர் என்று வெளிப்படையாக எங்களிடத்தில் தெளிவாக எடுத்துச் சொல்லவில்லை. அதனால் தான் எதிர் கட்சிகளின் சார்பில் ஒரு வேட்பாளரை நிறுத்த வேண்டிய அவசியம் இன்றைக்கு ஏற்பட்டுள்ளது.

  • இந்திய குடியரசுத் தேர்தலில் மதச்சார்பு வேட்பாளருக்கு அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அணி ஆதரவு தெரிவித்து இருக்கிறார்களே?

எடப்பாடி பழனிசாமி ஆதரவு கொடுத்திருப்பது மதச்சார்பு மிக்கவர்களுக்கு மட்டுமல்ல, தாங்கள் அனைவரும் வருமான வரித்துறை ரெய்டில் இருந்து தப்பிக்க வேண்டும், அமலாக்கத்துறையில் இருந்து தப்பிக்க வேண்டும், வழக்குகளில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக, ஆதரவு தெரிவித்து இருக்கிறார் என்பது தான் உண்மை.

  • தமிழகத்தை சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் மீராகுமாரை ஆதரிக்க வேண்டும் என்று திமுக கோரிக்கை எழுப்புமா?
ALSO READ:  அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

எதிர்க் கட்சிகள் ஒருங்கிணைந்து முடிவு செய்துள்ள வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். எனவே, அதனடிப்படையில் ஆதரவு கேட்க தயாராக இருக்கிறோம்.

  • திமுக தலைவரின் வைர விழாவில் பங்கேற்ற நிதிஷ்குமார், பாஜக., வேட்பாளரை ஆதரிப்பது குறித்து…

தலைவரின் சட்டமன்ற வைர விழா நிகழ்ச்சி குடியரசுத் தேர்தலை முன்னிட்டு நடந்த விழாவல்ல. அது தலைவருக்காக மட்டுமே நடைபெற்ற விழா. அதனால் தான் அவர் விழாவில் பங்கேற்றபோதும் தலைவரைப் பற்றி மட்டும் பேசிவிட்டுச் சென்றார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories