December 6, 2025, 7:17 AM
23.8 C
Chennai

கணவன் கண்முன்னே மனைவியை இழுத்துச் சென்று.. காட்டில் நடந்த கொடூரம்!

tiger-killed-1

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் சிங்காரா வனச்சரகத்திற்குட்பட்ட கல்ஹல்லா காப்பு காட்டுக்குள் வழக்கம்போல் கால்நடைகளை மேய்க்கவும், விறகு சேகரிக்கவும் குரும்பர்பாடியைச் சேர்ந்த சிலர் சென்றுள்ளனர்.

வனத்தில் விறகு சேகரித்துக்கொண்டிருந்த பெண் ஒருவர், திடீரென பயங்கர சத்ததுடன் அலறியுள்ளார். அலறல் சத்தம் கேட்ட மற்றவர்கள் அருகில் சென்று பார்த்தபோது பெண் புலி ஒன்று அந்தப் பெண்ணை அடித்து புதருக்குள் இழுத்துச் சென்றுள்ளது. இதைக்கண்டு பதறியவர்கள், கூச்சலிட்டுள்ளனர்.

tiger-killed-woman

சுமார் 200 மீட்டர் தூரம் புதருக்குள் பெண்ணை இழுத்துச் சென்ற புலி மக்களின் கூச்சலால் பெண்ணை விட்டுவிட்டு ஓடியுள்ளது. இவர்கள் அருகில் சென்று பார்த்தபோது அந்தப்பெண் படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்திருக்கிறார்.

இந்தத் துயர நிகழ்வு குறித்து நம்மிடம் பேசிய வனத்துறை ஊழியர், “சுமார் 12 மணி வாக்கில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாதன், அவரது மனைவி உள்ளிட்ட சிலர் காட்டுக்குள் இருந்துள்ளனர்.

tiger-killed

மாதன் கண் முன்னாலேயே மனைவி கெளரியைத் தாக்கிய புலி, கொன்று இழுத்துச் சென்றுள்ளது.உடலை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம்” என்றார்.

நீலகிரியில் கடந்த 2014 முதல் 2016 வரை தொடர்ந்து மூன்று ஆண்டுகள் புலி – மனித எதிர்க்கொள்ளல் சம்பவங்கள் அதிகரித்தது. இடையில் அதுபோன்ற சம்பவம் எதுவும் நடைபெறாத நிலையில், தற்போது நடந்துள்ள இந்த சம்பவம் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories