சனிக்கிழமை விடுமுறையாக அறிவிக்க வேண்டும்: அரசு அலுவலர்கள்!

SBI bank atm

சனிக்கிழமையை மீண்டும் விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக மார்ச் 25ம் தேதி முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் அரசு அலுவலகங்கள் முற்றிலும் இயங்கவில்லை. கிட்டத்தட்ட ஒருமாதம் கழித்தே குறைந்த அளவு ஊழியர்களுடன் அரசு அலுவலங்கள் இயங்கின.

அதன்பிறகு படிப்படியாக 50 சதவீத ஊழியர்களை வேலைக்கு சுழற்சி முறையில் வர அரசு உத்தரவிட்டது. இப்போது பேருந்து போக்குவரத்திற்கு அனுமதித்த அரசு 100 சதவீதம் அரசு ஊழியர்கள் பணிக்கு வர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இதன் காரணமாக சனிக்கிழமையை மீண்டும் விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் இரா.சண்முகராஜன் இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறிருப்பதாவது:

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பதற்காக வருகிற 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பல்வேறு தளர்வுகளையும் முதல்வர் அறிவித்துள்ளார். அதன்படி தற்போது, அனைத்து அரசு அலுவலகங்களும் 50 சதவீத பணியாளர்களுடன் பணியாற்றி வரும் சூழலில், செப்டம்பர் 1ம் தேதி (நேற்று) முதல் 100 சதவீத அலுவலர்கள் பணியாற்றிட உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடைபிடிக்கப்பட்டு வந்த ஊரடங்கு உத்தரவுப்படி 50 சதவீத அலுவலர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வந்த சூழ்நிலையில், அனைத்து சனிக்கிழமையும் வேலைநாளாக தமிழக அரசு அறிவித்திருந்தது. அன்றைய சூழ்நிலையில் அந்நிகழ்வு தேவைப்பட்டது.

தற்போது, 100 சதவீத அலுவலர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்பட உத்தரவு பிறப்பித்த வேளையில் சனிக்கிழமை விடுமுறையாக அறிவிக்கப்படவில்லை. எனவே 100 சதவீத பணியாளர்களும் அலுவலகங்களில் பணியாற்றி வரும் இந்த நேரத்தில் சனிக்கிழமையை விடுமுறை நாளாக அறிவித்து முதல்வர் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” இவ்வாறு சண்முகராஜன் கூறியுள்ளார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Entertainment News

Popular Categories