சனிக்கிழமை விடுமுறையாக அறிவிக்க வேண்டும்: அரசு அலுவலர்கள்!

SBI bank atm

சனிக்கிழமையை மீண்டும் விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக மார்ச் 25ம் தேதி முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் அரசு அலுவலகங்கள் முற்றிலும் இயங்கவில்லை. கிட்டத்தட்ட ஒருமாதம் கழித்தே குறைந்த அளவு ஊழியர்களுடன் அரசு அலுவலங்கள் இயங்கின.

அதன்பிறகு படிப்படியாக 50 சதவீத ஊழியர்களை வேலைக்கு சுழற்சி முறையில் வர அரசு உத்தரவிட்டது. இப்போது பேருந்து போக்குவரத்திற்கு அனுமதித்த அரசு 100 சதவீதம் அரசு ஊழியர்கள் பணிக்கு வர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இதன் காரணமாக சனிக்கிழமையை மீண்டும் விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் இரா.சண்முகராஜன் இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறிருப்பதாவது:

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பதற்காக வருகிற 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பல்வேறு தளர்வுகளையும் முதல்வர் அறிவித்துள்ளார். அதன்படி தற்போது, அனைத்து அரசு அலுவலகங்களும் 50 சதவீத பணியாளர்களுடன் பணியாற்றி வரும் சூழலில், செப்டம்பர் 1ம் தேதி (நேற்று) முதல் 100 சதவீத அலுவலர்கள் பணியாற்றிட உத்தரவிடப்பட்டுள்ளது.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

ஏற்கனவே கடைபிடிக்கப்பட்டு வந்த ஊரடங்கு உத்தரவுப்படி 50 சதவீத அலுவலர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வந்த சூழ்நிலையில், அனைத்து சனிக்கிழமையும் வேலைநாளாக தமிழக அரசு அறிவித்திருந்தது. அன்றைய சூழ்நிலையில் அந்நிகழ்வு தேவைப்பட்டது.

தற்போது, 100 சதவீத அலுவலர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்பட உத்தரவு பிறப்பித்த வேளையில் சனிக்கிழமை விடுமுறையாக அறிவிக்கப்படவில்லை. எனவே 100 சதவீத பணியாளர்களும் அலுவலகங்களில் பணியாற்றி வரும் இந்த நேரத்தில் சனிக்கிழமையை விடுமுறை நாளாக அறிவித்து முதல்வர் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” இவ்வாறு சண்முகராஜன் கூறியுள்ளார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories