கர்ப்பமான 9 ஆம் வகுப்பு மாணவி! குழந்தைக்கும் அப்பாதான் அப்பா!

Published:

pragnent
pragnent

திருவண்ணாமலை அருகே பெற்ற மகளை தந்தையே கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை அருகே உள்ள ஆரணியை சேர்ந்தவர் கன்னியப்பன். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகள் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் மாணவி உடல்நலமின்றி இருப்பதை அறிந்த பள்ளி நிர்வாகத்தினர் அவரை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்ததில் மாணவி 8 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது.

அதை தொடர்ந்து இதுகுறித்து மாணவியிடம் விசாரித்ததில் மாணவியின் தந்தையே அவரிடம் தவறாக நடந்து கொண்டது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் கன்னியப்பனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related articles

Recent articles

spot_img