திருவரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் திறப்பு!

srirangam2 - 2026

திருச்சி ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபத வாசல் திறப்பு செவ்வாய்க்கிழமை இன்று அதிகாலை நடைபெற்றது. பரமபத வாசலைக் கடந்து நம்பெருமாள் ரத்தின அங்கி பாண்டியன் கொண்டை கிளி மாலை உள்ளிட்ட ஆபரணங்களைத் தரித்தபடி, பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

பூலோக வைகுண்டம் என்று போற்றப்ப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானது. இங்கே மார்கழி மாதம் 20 நாட்கள் திரு அத்யயன உத்ஸவம் என்ற வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா நடைபெறும். இந்த விழா நாலாயிர திவ்யப் பிரபந்தத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து பகல் பத்து, இராப்பத்து என்று இரண்டு பகுதிகளாக நடத்தப்படுகிறது.

பகல் பத்து நாட்களில் பெருமாள் முன் அரையர்கள் திருமங்கை ஆழ்வாரின் திருமொழிப் பாசுரங்களை அபிநயத்துடன் பாடுவார்கள். திருநெடுந்தாண்டகத்துடன் இந்த விழா தொடங்கும். இதற்கு திருமொழித் திருநாள் என்று பெயர்.

srirangam3 - 2026

இராப்பத்து தொடக்க நாளின் அதிகாலை பரமபதவாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபம் வந்து பக்தர்களுக்கு தரிசனம் அருள்வார்.

இராப்பத்து 10 நாட்களும் நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரங்கள் பாடப்படும். இதற்கு திருவாய்மொழித் திருநாள் என்று பெயர்.

ALSO READ:  ‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

பகல் பத்து – திருமொழித் திருநாள் கடந்த 4ம் தேதி தொடங்கியது. அன்று முதல் நம்பெருமாள் தினமும் அதிகாலையில் புறப்பட்டு, கோயில் அர்ஜுன மண்டபத்தில் ஆஸ்தானமிருந்து திருமொழிப் பாசுரங்களைக் கேட்டார். பகல் பத்து உத்ஸவத்தின் நிறைவு நாளான திங்கள்கிழமை நேற்று நம்பெருமாள் மோகினி அலங்காரம் என்ற நாச்சியார் திருக்கோலத்தில் எழுந்தருளினார்.

வைகுண்ட ஏகாதசி உத்ஸவத்தின் முக்கிய நிகழ்ச்சியான இன்று பரமபத வாசல்  திறப்பு அதிகாலை நடைபெற்றது. அப்போது நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அதிகாலை 3.30க்கு மூலஸ்தானத்திலிருந்து சிம்மகதியில் புறப்பட்டு, காலை 4.45க்கு பரமபதவாசல் முன் எழுந்தருளினார். பரமபதவாசல் திறக்கப்பட்டதும் அதன் வழியே நம்பெருமாள் கடந்து வந்தார். நம்பெருமாள் ரத்தின அங்கி பாண்டியன் கொண்டை கிளி மாலை உள்ளிட்ட ஆபரணங்கள் தரித்து சேவை சாதித்தார்.

நேற்று இரவு முதலே காத்திருந்த முக்கியஸ்தர்கள் நம்பெருமாளுடன் பரமபத வாசலைக் கடந்து வந்தனர்.

srirangam4 - 2026

பரமபத வாசல் திறப்பின் போது பெருவாரியான பக்தர்களுக்கு  அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டிருந்தது.. கொரோனா கால கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால் இந்த ஆண்டும் பெருமாள் புறப்பாட்டின் போது பணியாளர்கள் தவிர பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபம் வந்து ஆஸ்தானம் சேர்ந்ததும் வழக்கம் போல் பக்தர்கள் பரமபத வாசல் வழியே சென்று பெருமாளை தரிசிக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. ரெங்கா ரெங்கா கோபுரம் வழியாக காலை 7:00 முதல் இரவு 9:00 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். நம்பெருமாளை ஆயிரங்கால் மண்டபத்தில் தரிசிக்க விரும்புபவர்கள் கிழக்கு வெள்ளை கோபுரம் வழியாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

srirangam1 - 2026

ஸ்ரீரங்கத்தில் தை பிரம்மோத்ஸவம் – மிக முக்கியமானது. விருப்பன் திருநாள் உத்ஸவம் சிறப்பு பெற்றது என்பதால், அந்த உத்ஸவம் தொடங்கும் நாளில் வைகுண்ட ஏகாதசி உத்ஸவமும் இடையீடாக இந்த முறை வருகிறது. எனவே ஒரு மாதம் முன் வரும் ஏகாதசியை கணக்கிட்டு, கார்த்திகை மாதத்திலேயே ஏகாதசி உத்ஸவம் தொடங்கி நடைபெற்றது. இவ்வாறு திருவரங்கத்தில் மட்டும் 19 ஆண்டுகளுக்கு ஒரு முறை வைகுண்ட ஏகாதசி உத்ஸவம நடைபெறுவது வழக்கம்.

sriranganathar 9 days alankara - 2026
ஒன்பது நாட்களிலும் திருவரங்கம் ந்ம்பெஉமாளின் அலங்காரங்கள்…
ALSO READ:  சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories