IPL 2023: குறைந்த ஸ்கோர் மேட்ச்சில் விளையாடுவது எப்படி?

ipl 2023 matches - 2026
#image_title

ஐ.பி.எல் 2023 – எட்டாம் நாள் – 07.04.2023

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

ஐ.பி.எல் 2023 தொடரின் எட்டாம் நாளான நேற்று சன் ரைசர்ஸ் ஹதராபாத, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கிடையே லக்னோவில் நடந்த ஆட்டத்தில் லக்னோ அணி வென்றது. ஹைதராபாத் அணியை (121/8, அன்மோல்ப்ரீத் சிங் 31, ராகுல் திரிபாதி 34, அப்துல் சமது 21, க்ருணால் பாண்ட்யா 3/18, அமித் மிஸ்ரா 2/23) லக்னோ அணி (16 ஓவரில் 127/5, கே.எல். ராகுல் 35, க்ருணால் பாண்ட்யா 34, அதில் ரஷீத் 2/23) 5 விக்கட் வித்தியாசத்தில் வென்றது.

டாஸ் வென்ற ஹதராபாத் அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. ஆனால் 20 ஓவருக்கு எட்டு விக்கட் இழப்பிற்கு 121 ரன்கள் மட்டுமே அந்த அணியால் எடுக்க முடிந்தது. லக்னோ அணியில் மார்க் வுட், ஆவேஷ் கான் இருவரும் இன்று ஆடவில்லை. ஆனால் க்ருணால் பாண்ட்யா, ரவி பிஷ்னோய், அமித் மிஸ்ரா ஆகிய மூவரும் தலா 4 ஓவர்கள் வீதம் 12 ஓவர்கள் வீசி 57 ரன் கொடுத்து 6 விக்கட் எடுத்தனர். க்ருணால் மாயங்க் அகர்வால், அன்மோல்ப்ரீத்சிங், மர்க்ரம் ஆகியோர் விக்கட்டுகளை எடுத்து ஆட்டத்தில் திருப்பத்தை ஏற்படுத்தினார்.

ராகுல் திரிபாதியும் வாஷிங்டன் சுந்தரும் ஏறத்தாழ ஏழு ஓவர்கள் விளையாடி ஹைதராபாத் அணியின் ஸ்கோரை சற்று நிலைநிறுத்தினர். இவர்கள் இவ்வாறு விளையாடியதில் நன்மையும் இருந்தது; தீமையும் இருந்தது. நன்மை என்னவென்றால் அணி குறைந்தது 121 ரன் அடித்தது. தீமை என்னவென்றால் இம்பேக்ட் ப்ளேயராக அதிரடி பேட்டராக கிளாசன் இரங்க இருந்தார். ஆனால் அவரைப் பயன்படுத்த முடியாமல் போனது.

லக்னோ அணியில் டி காக் இன்று தொடக்க வீரராக ஆட வரவில்லை. எனவே கைல் மேயர்ஸ் ராகுலுடன் தொடக்க வீரராக இறங்கினார். ஆனால் அவராலும் அதிரடியாக ஆட முடியவில்லை. பவர்ப்ளே முடிவில் க்ருணால் ராகுலுடன் இணைந்தார். இருவரும் நிதானமாக ஆடினர். ஒவ்வொரு ஓவருக்கும் ஒரு ஃபோர் என்ற கணக்கில் அடித்து ரன்ரேட் 7-8 என்ற கணக்கில் இருக்குமாறு பார்த்துக்கொண்டனர். 13ஆவது ஓவருக்குப் பின்னர் இருவரும் ஆட்டமிழந்தாலும் அதற்குள் லக்னோ அணியின் வெற்றி உறுதியாகிவிட்டது.

குறைந்த ஸ்கோர் மேட்ச். லக்னோ அனி ஹைதராபாத் அணியை விட நன்றாக ஆடியது என்றுதான் சொல்ல வேண்டும். க்ருணால் பாண்ட்யா ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories