நெல்லை – சென்னை இடையே 20 பெட்டிகளுடன் புதிய வந்தே பாரத் ரயில் இயக்கம்!

Published:

new vande bharat train color - 2026

திருநெல்வேலி சென்னை திருநெல்வேலி வந்தே பாரத் ரயிலில் மேலும் நான்கு பெட்டிகள் கூடுதலாக இணைப்பு.. புத்தம் புதிய ரயில் இயக்கம்…!

திருநெல்வேலி – சென்னை – திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் சேவை துவங்கப்பட்டபோது எட்டு ரயில் பெட்டிகளுடன் இயங்கியது. பின்பு பயணிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு மேலும் எட்டு பெட்டிகள் இணைக்கப்பட்டன.

இந்த வந்தே பாரத் ரயிலுக்கு பயணிகள் ஆதரவு அதிகரிப்பதால் செப்டம்பர் 24 முதல் மேலும் நான்கு பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்படவுள்ளது. எனவே இந்த ரயில் மொத்தம் 20 பெட்டிகளுடன் புத்தம் புதிய காவி கருப்பு வண்ணம் கொண்ட ரயிலாக மேலும் அதிநவீன சொகுசு வசதிகள் கொண்ட ரயிலாக இயங்கும்.

இதன் மூலம் கூடுதலாக 312 பயணிகள் பயணிக்கலாம். தற்போது சாதாரண இருக்கை வசதி பெட்டிகளில் 1128 பயணிகள் பயணித்து வருகின்றனர். இந்த இருக்கை வசதி பெட்டிகளில் செப்டம்பர் 24 முதல் 1440 பயணிகள் பயணம் செய்ய முடியும்.

செப்டம்பர் 24 முதல் இணைக்கப்படும் 20 பெட்டிகளில் இரண்டு சிறப்பு இருக்கை வசதி பெட்டிகளும் இருக்கின்றன. இந்த புதிய ரயில் கடந்த இரு நாட்களுக்கு முன் திருநெல்வேலி வந்தடைந்தது.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

தற்போது இயங்கும் 16ரேக் வந்தே பாரத் ரயில் திருவனந்தபுரம் காசர்கோடு இடையே இயங்கிய பெட்டியாகும்.திருவனந்தபுரம் காசர்கோடு மங்களூர் வந்தே பாரத் ரயில் 20 பெட்டிகளுடன் புதிய ரயிலாக மாற்றப்பட்டது.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img