சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் கைவிரல் ரேகை பிரிவு உதவி ஆய்வாளர் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் அக்டோபர் 13-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. தேர்வுக்கு கணினி மூலம் விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.