தமிழக ஆளுநர் ரோசைய்யா இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியுடன் திடீர் சந்திப்பு

 
 
தமிழக ஆளுநர் ரோசைய்யா இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை இன்று சந்தித்துப் பேசினார். தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மெடக் மாவட்டம் எர்ரவள்ளி கிராமத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் தனது சொந்தப் பணம் ரூ.20 கோடி செலவில் மகாசண்டியாகம் நடத்தி வருகிறார். கடந்த 23–ந்தேதி தொடங்கிய இந்த யாகம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
 
2 ஆயிரம் பண்டிதர்கள் இந்த யாகத்தை நடத்துகிறார்கள். இந்த யாகத்தில் சந்திரசேகர ராவ் தனது மனைவியுடன் தினமும் கலந்து கொள்கிறார். மேலும் முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்கிறார்கள்.
 
மராட்டிய மாநில கவர்னர் வித்யாசாகர்ராவ் தனது மனைவியுடன் கலந்து கொண்டார். மேலும் சிருங்கேரி மடாதிபதி ஸ்ரீஸ்ரீஸ்ரீபாரதி தீர்த்த சுவாமிகள், ராம்பூர் மடாதிபதி மாதவானந்தா சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீபீட மடாதிபதி பரிபூரனாந்தா சுவாமிகள், திரிதண்ட மடாதிபதி சின்ன ஜீயர் ஆகியோரும் பூஜையில் கலந்து கொண்டனர். அவர்களிடம் சந்திரசேகர ராவ் ஆசி பெற்றார். அதோடு தினமும் குங்கும பூஜை நடக்கிறது.
 
நேற்று நடைபெற்ற யாகத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தமிழ்நாடு கவர்னர் கே.ரோசைய்யா, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் டி.சுபிராம ரெட்டி, ஆந்திர முன்னாள் மந்திரி கீதா ரெட்டி, ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி எஸ்.வி.ரமணா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 
ஒவ்வொரு நாள் பூஜையிலும் 6 ஆயிரம் பெண்கள் கலந்து கொள்கிறார்கள். பூஜையில் பங்கேற்கும் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், புடவை, ஜாக்கெட், மகாசண்டி டாலர் போன்ற மங்கள பொருட்கள் வழங்கப்படுகிறது. இதனால் தினமும் பெண்கள் கூட்டம் கூட்டமாக யாக பூஜைக்கு வருகிறார்கள். அனைவருக்கும் அறுசுவை விருந்து அளிக்கப்படுகிறது. யாகத்தில் பங்கேற்பவர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வண்ணத்தில் ஆடை அணிகிறார்கள்.
 
முதல் நாள் மஞ்சள் ஆடையிலும் அடுத்த நாள் ரோஸ் வண்ண ஆடையிலும் அனைவரும் பங்கேற்றனர். நேற்று வெள்ளை ஆடையில் அனைவரும் காட்சி அளித்தனர். சந்திரசேகர ராவ் கூட இதே வண்ணத்தில் ஆடை அணிந்து இருந்தார். பத்திரிகையாளர்களுக்கு கூட இதே ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது, இன்றுடன் (27–ந்தேதி) இந்த சண்டி யாகம் நிறைவு பெறுகிறது.
 
இன்றைய பூஜையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர். இதற்காக, தெலுங்கானாவுக்கு வந்துள்ள ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை தமிழக ஆளுநர் ரோசைய்யா மரியாதை நிமித்தமா இன்று சந்தித்துப் பேசியதாக சென்னை மாளிகை வட்டார தகவல் கூறுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories