பொங்கல் பண்டிகையையொட்டி வரும் 2019ம் ஆண்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.
3 இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கால்நடை பராமரிப்பு துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அரசாணையில் மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜனவரி 15-ஆம் தேதியும், பாலமேட்டில் ஜனவரி 16-ஆம் தேதியும் அலங்காநல்லூரில் ஜனவரி 17-ஆம் தேதியும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்துவதற்கான அரசாணை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.