சிங்கப்பூரில் திருமுறை தமிழிசை இரு ஓதுவார்கள் பங்கேற்பு!

IMG 20190602 WA0023 e1559460063756 - 2026

திருமுறை தமிழிசை இரு ஓதுவார்கள் பங்கேற்பு!

சிங்கப்பூரின் செண்பக விநாயகர், மாரியம்மன் எனும் இரு பெரும் கோயில்களில் பக்திப் பாடல் பணி புரியும் இரு ஓதுவார்கள் நேற்றிரவு இனிமையான திருமுறை இசை நிகழ்ச்சி ஒன்றை தமிழ்ச் சுவையோடு தந்தனர். தேன் தமிழாக இனிக்கும் திருமுறைப் பதிகங்களை தித்திக்கும் ராக, தாளக் கச்சிதங்களுடன் இரண்டரை மணி நேரம் மேடை ஏற்றினர். பக்க வாத்யங்களாக அனுபவக் கலைஞர்கள் கு.மணிகண்டனும் (வயலின்), எஸ்.தேவராஜனும் (மிருதங்கம்) நிகழ்ச்சிக்கு மெருகு சேர்த்தனர்.சிங்கப்பூர் திருமுறைக் குழுவினரும், ஆலய நிர்வாகிகளும் இணைந்து படைத்த நிகழ்ச்சி இது.

அந்தக் காலத்தில் மங்கல வாத்தியங்கள் முழங்கும் தேரோடும் வீதியை நினைவு படுத்தும் நாட்டை ராகத்தில் விநாயகரை முன்னிறுத்திய இரு கலைஞர்களும், கிட்டத்தட்ட 20க்கு மேற்பட்ட ராகங்களின் பாவங்களை மேடையில் இறக்கினர். கௌரி மனோகரியில் ‘நம்கடம் பனைப் பெற்றவள்’, அமர்க்களமான ஆரபியில் ‘வீணையர்’, சிவக் கொழுந்தை சாராக்கித் தந்த பந்துவராளி ராகம், குந்தவராளியில் ‘வேதம் ஓதி’, ’வந்தவர்களுக்கெல்லாம் இன்பங்கள்’ தந்த அமிர்தவர்ஷிணி ராக பதிகம் போன்றவை இரு கலைஞர்களின் இசைத் திறனையும், தமிழ்த் திறனையும் வெளிப்படுத்தின. கரகரப்பிரியாவில் அவர்கள் தந்த ‘தேனைப் பொழிந்து’, இன்பப் பொழிவு. கர்நாடக தேவகாந்தாரியில் அமைந்த ‘என்னை எங்கே” ஒரு நல்ல தமிழ்ச் சுவை.

அரி காம்போதி , நிகழ்வின் முக்கிய ராகம். விருத்தத்துடன் பாடலும் அருமையாக அமைந்தது.இப் பதிகத்தில், பக்க வாத்ய மணிகண்டன், முக்கிய நாயகன் ஆனார். அரி காம்போதியிலும் அவர் அள்ளிக் கொட்டியதை அனைவரும் ரசித்தனர். திரு.வடிவேலு பல பதிகங்களை ராக சுவையுடன் தந்தார்.

ALSO READ:  பராபவ - பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

அடாணா ராகத்த்திற்கு அத்தனை அழகா என வியந்து போனோம், ஒதுவார்கள் இருவரும் ‘மாதர் மடப் பிடியும்’ என்கிற யாழ்முறிப் பண்ணைப் பாடியபோது! சொல் நடை சிறக்கும் இப் பாடல் தர்மபுரித் தெய்வத்தைப் புகழ்கிறது.

சைவப் புகழ் பாடும் தெய்வீகத் தமிழ்ப் பாடல்களுக்குப் பொருத்தமான மெட்டமைத்து, இசைக் கட்டுடனான ராகங்களை நடமாடவிட்ட பாங்கை எப்படியும் பாராட்டலாம். கீரவானி, மதுவந்தி, ரீதி கௌலை, மோகனம்,ரேவதி ஆபேரி, சிவரஞ்சனி ஆகியவற்றுடன், நீலாம்பரி, காப்பி, சண்முகப் பிரியா, சிந்துபைரவி உள்ளிட்ட ராக மாலிகைகளும் சுவையில் ஒரு தனிச் சுவை!

திறன் படைத்த இந்த ஓதுவார்கள், காலை-மாலை நேரங்களில் கோயில் சன்னதிகளில் குறுகிய காலத்திற்கு மட்டும் பாடிக் கொண்டிராமல், தமிழ் மக்கள் அரங்கில் பாடும் வாய்ப்புகளை கோயில் நிர்வாகங்கள் ஏற்பாடு செய்து தர வேண்டும். தமிழும் வளரும் – இசையும் வளரும்!

-ஏபிஆர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories