சென்னை:
சென்னை மாநகரில் சுமார் 95 சதவீத பகுதிகளில் நேற்று நள்ளிரவில் திடீர் என மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் வெயிற்கால புழுக்கத்தில் சென்னை மக்கள் பெரும் அவதிப்பட்டனர். மின்நிலைய மின்மாற்றியில் ஏற்பட்ட பழுது காரணமாக இந்த மின்வெட்டு ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த திடீர் மின்வெட்டால், சென்னையின் முக்கியப் பகுதிகளான நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை, மாம்பலம், ராயப்பேட்டை, வியாசர்பாடி, கொளத்தூர், தேனாம்பேட்டை, மயிலாப்பூர் என சென்னை மாநகரின் 95 சதவீத பகுதிகள் இருளில் மூழ்கின. மின் துண்டிப்பால் வெயிற்கால வேனற் புழுக்கத்திலும் இரவு வெளிச்சம் இல்லாமலும் சென்னை மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
பின்னர், மின்மாற்றியில் ஏற்பட்ட பழுது சரிசெய்த பின்னர் மீண்டும் மின்சாரம் விநியோகிக்கப்பட்டதாக மின் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.