நள்ளிரவு திடீர் மின்வெட்டால் அவதிப்பட்ட சென்னை!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Published:

power cut - 2026

சென்னை:

சென்னை மாநகரில் சுமார் 95 சதவீத பகுதிகளில் நேற்று நள்ளிரவில் திடீர் என மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் வெயிற்கால புழுக்கத்தில் சென்னை மக்கள் பெரும் அவதிப்பட்டனர். மின்நிலைய மின்மாற்றியில் ஏற்பட்ட பழுது காரணமாக இந்த மின்வெட்டு ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த திடீர் மின்வெட்டால், சென்னையின் முக்கியப் பகுதிகளான நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை, மாம்பலம், ராயப்பேட்டை, வியாசர்பாடி, கொளத்தூர், தேனாம்பேட்டை, மயிலாப்பூர் என சென்னை மாநகரின் 95 சதவீத பகுதிகள் இருளில் மூழ்கின. மின் துண்டிப்பால் வெயிற்கால வேனற் புழுக்கத்திலும் இரவு வெளிச்சம் இல்லாமலும் சென்னை மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

பின்னர், மின்மாற்றியில் ஏற்பட்ட பழுது சரிசெய்த பின்னர் மீண்டும் மின்சாரம் விநியோகிக்கப்பட்டதாக மின் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

Related articles

Recent articles

spot_img