சென்னை ஐஐடியில் நடந்தது என்ன?: உண்மை வெளிவர மூக்குடையும் ஊடகங்கள்!

Published:

IIT Madras PhD scholar who participated in beef fest beaten - 2026

சென்னை:

இரண்டு நாள்களுக்கு முன்னால் ஐஐடியில் படிக்கும் கம்யூனிச, இஸ்லாமிய மாணவர்கள் மாட்டுக்கறி விழா நடத்தியிருக்கின்றனர். அதற்கு அடுத்தநாள் ஜெயின் மாணவர்கள் சாப்பிடும்போது அங்கே சென்ற சூரஜ் மாட்டுக்கறியை நீங்களும் சாப்பிட வேண்டும் என்று மிரட்டியுள்ளான். அவனோடு கூட சென்ற இன்னும் இரண்டுபேரும் ஜெயின் சமூக மாணவர்களை மிரட்டியுள்ளனர்.

ஜெயின் சமூதாயத்தவர்கள் அசைவ உணவை சாப்பிடமாட்டார்கள். இது தெரிந்தும் கலவரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு ஜெயின் மாணவர்களிடம் தகராறு செய்தனர்.

அப்போது அங்கு சாப்பிட்டுக்கொண்டிருந்த மணிஷ்குமார் ஜெயின் என்ற மாணவருக்கும் இவர்களுக்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அந்த தகராறில் சூரஜ் மற்றும் மணிஷ் குமார் ஜெயினுக்கும் அடிபட்டிருக்கிறது.

மணிஷ்குமாருக்குத்தான் பலத்த அடி. மூன்றுபேர் சேர்ந்து அடித்திருக்கிறார்கள். அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது.

இங்குதான் தமிழ்நாட்டின் சில மீடியாக்கள், அமைப்புகள் தங்கள் அயோக்கித்தனத்தை காட்டிவருகின்றன. மணிஷ்குமாருக்கு ஏற்பட்டிருக்கும் காயத்தையோ அல்லது அவர் தரப்பு வாதத்தையோ இதுவரை இந்த கள்ள மீடியாக்களும் கள்ள அமைப்புகளும் காட்டவில்லை. கள்ள மௌனம் சாதித்து வருகிறார்கள்.

ALSO READ:  ஒரு கைத்தறி தயாரிப்பையாவது வாங்கி, அதுகுறித்த வீடியோவை பகிருங்கள்!

சூரஜ் என்ற மாணவருக்கு மட்டுமே அடிபட்டிருக்கிறது என்கிற ரீதியில் மீடியாக்கள் செய்திகளை பரப்பிவருகின்றன. இதில் மணிஷ்குமார் எந்த அமைப்பிலும் இல்லை. ஆனாலும் அவர் பிஜேபி, ஆர்எஸ்எஸ், ஏபிவிபி என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர் எந்த அமைப்பையோ, கட்சியையோ சார்ந்தவர் அல்ல.

அதைவிட கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் என்னவென்றால் சூரஜ் தமிழ் மாணவனாம். இப்படி பதிவு செய்து தமிழர்கள் மத்தியில் கலவரத்தை தூண்ட முயற்சி செய்துவருகின்றனர். சூரஜ் மலையாளி என்று கேரள மாநில முதல்வரே அறிக்கை கொடுத்திருக்கிறார். இவர்களுடைய நோக்கமே ஆர்எஸ்எஸ், பாஜக, ஏபிவிபிக்கு எதிராக கலவரத்தை தூண்ட வேண்டும் என்பதே.

இந்நிலையில், சூரஜ் தமிழ் மாணவர் என்று ஒரு தரப்பு செய்திகளை முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரப்ப, கேரள முதல்வரோ மலையாள மாணவர் தமிழகத்தில் அடி பட்டிருக்கிறார், இது குறித்து தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிவிட்டரில் கோரிக்கை விடுக்கிறார்.

ஐஐடியில் கம்யூனிச, இஸ்லாமிய காட்டுமிராண்டித்தனத்தை சகமாணவர்கள் பார்த்துக்கொண்டுதான் வருகிறார்கள். ஒருநாள் எல்லோரும் இவர்களுக்கு எதிராக திரும்ப போகிறார்கள். அப்போது கம்யூனிச, இஸ்லாமிய ரௌடிகள் முழுவதுமான அங்கிருந்து துடைத்து எறியப்படுவார்கள் என்று சமூக நோக்கர்கள் எச்சரிக்கின்றனர்.

ALSO READ:  சதுரகிரி ஆடி அமாவாசை முன்னேற்பாட்டுப் பணிகள்; அதிகாரிகள் ஆய்வு!

செய்தி: ம. வேங்கடேசன்

Related articles

Recent articles

spot_img