
கோவை :
கோவை அருகே போத்தனூரை அடுத்த கணேசபுரம் பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானை தாக்கியதில் இதுவரை சிறுமி உள்பட 4 பேர் பலியாகி உள்ளனர்.
போத்தனூர் கணேசபுரத்தில் காட்டு யானை தாக்கி, வீட்டின் வெளியே படுத்திருந்த சிறுமி மற்றும் மூதாட்டி உயிரிழந்தனர். முன்னதாக இயற்கை உபாதை கழிக்கச் சென்ற ஜோதி, நாகரத்தினம் ஆகிய 2 பேரும் யானை தாக்கி உயிரிழந்தனர். எனவே இந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்ட பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர் யானை ஊருக்குள் சுற்றுவதால் போத்தனூர், மதுக்கரை, சுந்தராபுரம், வெள்ளலூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
யானையை பிடிப்பதற்காக யானைகள் முகாமில் இருந்து 4 யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. யானையை துப்பாக்கியால் சுட்டு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கவும் தயாராக வனத்துறையினர் மற்றும் போலீசார் குழு போத்தனூரில் முகாமிட்டுள்ளது.


