அதிமுக., இரு அணிகளும் இணையும்: எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை

edappadi palanisamy - 2026

சென்னை:
அதிமுக.,வின் இரு அணிகளும் இணையும் என்று தாம் நம்புவதாக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அவர் இவ்வாறு நம்பிக்கை தெரிவித்தார்.

சென்னை திருவொற்றியூரில் அமைக்கப்பட்டுள்ள மாட்டு மந்தை மேம்பாலத் திறப்பு விழா வெள்ளிக்கிழமை இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம் இரு அணிகள் இணைவது குறித்து என்ன திட்டம் உள்ளது என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், “அதிமுக., இரு அணிகள் இணைப்பு நடைபெறும் என்று நம்புகிறேன் என்று கூறினார்.

மேலும், “நீட் நுழைவுத் தேர்வில் நாங்கள் தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். மாணவர் நலன் கருதி நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்குமாறு பிரதமரிடம் அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக நீதிமன்றம் ஏற்கெனவே ஒரு தீர்ப்பு வழங்கி உள்ளது. அதை கவனமாக எடுத்துக் கொண்டு எந்தவித சட்ட சிக்கலும் வராத அளவுக்கு இதில் முடிவுகள் எடுக்கப் படும். இந்த விவகாரத்தில் மாநில அரசைப் பொறுத்தவரை தமிழக மாணவர்கள் நலம் பாதிக்காத வகையில் கவனத்தோடு இந்த அரசு செயல்படுகிறது. அதற்காக நானும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களும் மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்” என்று அவர் கூறினார்.

அண்மையில் குடியரசுத் தலைவர் பதவியேற்புக்கு தில்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணியினரிடம் இரு அணிகளும் இணையவேண்டியதன் அவசியத்தை அவர்களுக்கு பாஜக., சார்பில் எடுத்துரைத்தாகக் கூறப்படுகிறது. மோடியும் இதனை அவர்களிடம் வற்புறுத்தியதாகவும் சொல்லப் படுகிறது. எனவே இது குறித்த பேச்சு தமிழகத்தில் எழுவது வாடிக்கையாகிவிட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories