சசிகலா புஷ்பா எம்.பி., ‘சக்களத்தி’ சத்யபிரியாவை கைது செய்ய மதுரையில் தில்லி போலீஸ் முகாம்!

sasikala pushpa2 - 2026

மதுரை: கடந்த மாதம் பரபரப்பை ஏற்படுத்திய அதிமுக., எம்.பி. சசிகலா புஷ்பா திருமண விவகாரத்தில் தொடர்புடைய ராமசாமியின் மனைவி சத்யபிரியா, அவரது சகோதரர் மணிகண்டன் ஆகியோரைக் கைது செய்ய தில்லி போலீஸார் மதுரையில் முகாமிட்டுள்ளனர். இது தொடர்பாக, மதுரையில் சத்யப்பிரியா வீட்டில் ஞாயிற்றுக்கிழமை நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

மதுரையைச் சேர்ந்த சத்யப்பிரியா என்பவர், கடந்த மாதம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், ஓரியண்டல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் என்று கூறிக் கொள்ளும் ராமசாமிதான் தன் கணவர் என்றும், நீதிபதி என்று ஏமாற்றி தன்னை அவர் திருமணம் செய்துகொண்டார் என்றும், தங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்த பின் அவர் தன்னை விட்டுச்சென்று விட்டார் என்றும், தற்போது சசிகலா புஷ்பா எம்.பி.க்கும், தனது கணவர் ராமசாமிக்கும் இடையே திருமணம் நடக்க இருப்பதாக அழைப்பிதழ்களைப் பார்த்ததாகவும் தெரிவித்திருந்தார்.

இந்தப் புகாரின் பேரில், திருப்பரங்குன்றம் மகளிர் போலீஸார் ராமசாமி மற்றும் அவரது சகோதரிகள் இருவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். சசிகலா புஷ்பா, ராமசாமி திருமணத்துக்கும் மதுரை மாவட்ட நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால் நீதிமன்றத் தடையை மீறி, சசிகலா புஷ்பா, ராமசாமியைத் திருமணம் செய்து கொண்டார்.

sasikala pushpa1 - 2026

அதன் பின்னர், சத்யபிரியா, அவரது சகோதரர் மணிகண்டன் ஆகியோர் மீது ராமசாமி தில்லி போலீஸாரிடம் ஒரு புகார் அளித்தார். அதில், தனது முதல் மனைவியின் மகளை, சத்யபிரியாவும் அவரது சகோதரர் மணிகண்டனும் கொடுமைப்படுத்தியதாகத் தெரிவித்தார். இந்தப் புகாரின்பேரில், சத்யபிரியா, மணிகண்டன் ஆகியோர் மீது தில்லி நார்த் அவென்யூ போலீஸார், குழந்தைகள் வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின் கீழ் மார்ச் 26 அன்று வழக்குப் பதிவு செய்தனர். அதன்பேரில், சத்யபிரியா, மணிகண்டன் இருவரையும் கைது செய்வதற்காக, தில்லி காவல் நிலைய சார்பு-ஆய்வாளர் விஜய்பால் தலைமையில் இரு பெண் காவலர்கள் உள்பட 5 போலீஸார் மதுரை வந்தனர்.

மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அனுமதி பெற்று, ஞாயிற்றுக்கிழமை மாலை சத்யபிரியாவின் வீட்டுக்குச் சென்றனர். ஆனால் சத்யபிரியா வீடு பூட்டப்பட்டிருந்தது. இதை அடுத்து அவரது வீட்டின் முன், தில்லி நார்த் அவென்யூ காவல் நிலையத்தில் ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெற உள்ள விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டினர்.

தில்லி போலீஸார் சத்யபிரியா வீட்டுக்கு வந்தபோது, அப்பகுதியினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தில்லி போலீஸார் கீரைத்துறை காவல் நிலையம் சென்று சத்யபிரியா குடும்பத்தினர் தொடர்பாக விசாரணை நடத்தினர். இவர்கள் இருவரையும் கைது செய்யும் வரை தில்லி போலீஸார் மதுரையில் தங்கியிருக்க திட்டமிட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories