சசிகலா புஷ்பா எம்.பி., ‘சக்களத்தி’ சத்யபிரியாவை கைது செய்ய மதுரையில் தில்லி போலீஸ் முகாம்!

sasikala pushpa2 - 2026

மதுரை: கடந்த மாதம் பரபரப்பை ஏற்படுத்திய அதிமுக., எம்.பி. சசிகலா புஷ்பா திருமண விவகாரத்தில் தொடர்புடைய ராமசாமியின் மனைவி சத்யபிரியா, அவரது சகோதரர் மணிகண்டன் ஆகியோரைக் கைது செய்ய தில்லி போலீஸார் மதுரையில் முகாமிட்டுள்ளனர். இது தொடர்பாக, மதுரையில் சத்யப்பிரியா வீட்டில் ஞாயிற்றுக்கிழமை நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

மதுரையைச் சேர்ந்த சத்யப்பிரியா என்பவர், கடந்த மாதம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், ஓரியண்டல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் என்று கூறிக் கொள்ளும் ராமசாமிதான் தன் கணவர் என்றும், நீதிபதி என்று ஏமாற்றி தன்னை அவர் திருமணம் செய்துகொண்டார் என்றும், தங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்த பின் அவர் தன்னை விட்டுச்சென்று விட்டார் என்றும், தற்போது சசிகலா புஷ்பா எம்.பி.க்கும், தனது கணவர் ராமசாமிக்கும் இடையே திருமணம் நடக்க இருப்பதாக அழைப்பிதழ்களைப் பார்த்ததாகவும் தெரிவித்திருந்தார்.

இந்தப் புகாரின் பேரில், திருப்பரங்குன்றம் மகளிர் போலீஸார் ராமசாமி மற்றும் அவரது சகோதரிகள் இருவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். சசிகலா புஷ்பா, ராமசாமி திருமணத்துக்கும் மதுரை மாவட்ட நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால் நீதிமன்றத் தடையை மீறி, சசிகலா புஷ்பா, ராமசாமியைத் திருமணம் செய்து கொண்டார்.

sasikala pushpa1 - 2026

அதன் பின்னர், சத்யபிரியா, அவரது சகோதரர் மணிகண்டன் ஆகியோர் மீது ராமசாமி தில்லி போலீஸாரிடம் ஒரு புகார் அளித்தார். அதில், தனது முதல் மனைவியின் மகளை, சத்யபிரியாவும் அவரது சகோதரர் மணிகண்டனும் கொடுமைப்படுத்தியதாகத் தெரிவித்தார். இந்தப் புகாரின்பேரில், சத்யபிரியா, மணிகண்டன் ஆகியோர் மீது தில்லி நார்த் அவென்யூ போலீஸார், குழந்தைகள் வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின் கீழ் மார்ச் 26 அன்று வழக்குப் பதிவு செய்தனர். அதன்பேரில், சத்யபிரியா, மணிகண்டன் இருவரையும் கைது செய்வதற்காக, தில்லி காவல் நிலைய சார்பு-ஆய்வாளர் விஜய்பால் தலைமையில் இரு பெண் காவலர்கள் உள்பட 5 போலீஸார் மதுரை வந்தனர்.

மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அனுமதி பெற்று, ஞாயிற்றுக்கிழமை மாலை சத்யபிரியாவின் வீட்டுக்குச் சென்றனர். ஆனால் சத்யபிரியா வீடு பூட்டப்பட்டிருந்தது. இதை அடுத்து அவரது வீட்டின் முன், தில்லி நார்த் அவென்யூ காவல் நிலையத்தில் ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெற உள்ள விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டினர்.

தில்லி போலீஸார் சத்யபிரியா வீட்டுக்கு வந்தபோது, அப்பகுதியினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தில்லி போலீஸார் கீரைத்துறை காவல் நிலையம் சென்று சத்யபிரியா குடும்பத்தினர் தொடர்பாக விசாரணை நடத்தினர். இவர்கள் இருவரையும் கைது செய்யும் வரை தில்லி போலீஸார் மதுரையில் தங்கியிருக்க திட்டமிட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories