சசிகலா புஷ்பா எம்.பி., ‘சக்களத்தி’ சத்யபிரியாவை கைது செய்ய மதுரையில் தில்லி போலீஸ் முகாம்!

sasikala pushpa2 - 2026

மதுரை: கடந்த மாதம் பரபரப்பை ஏற்படுத்திய அதிமுக., எம்.பி. சசிகலா புஷ்பா திருமண விவகாரத்தில் தொடர்புடைய ராமசாமியின் மனைவி சத்யபிரியா, அவரது சகோதரர் மணிகண்டன் ஆகியோரைக் கைது செய்ய தில்லி போலீஸார் மதுரையில் முகாமிட்டுள்ளனர். இது தொடர்பாக, மதுரையில் சத்யப்பிரியா வீட்டில் ஞாயிற்றுக்கிழமை நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

மதுரையைச் சேர்ந்த சத்யப்பிரியா என்பவர், கடந்த மாதம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், ஓரியண்டல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் என்று கூறிக் கொள்ளும் ராமசாமிதான் தன் கணவர் என்றும், நீதிபதி என்று ஏமாற்றி தன்னை அவர் திருமணம் செய்துகொண்டார் என்றும், தங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்த பின் அவர் தன்னை விட்டுச்சென்று விட்டார் என்றும், தற்போது சசிகலா புஷ்பா எம்.பி.க்கும், தனது கணவர் ராமசாமிக்கும் இடையே திருமணம் நடக்க இருப்பதாக அழைப்பிதழ்களைப் பார்த்ததாகவும் தெரிவித்திருந்தார்.

இந்தப் புகாரின் பேரில், திருப்பரங்குன்றம் மகளிர் போலீஸார் ராமசாமி மற்றும் அவரது சகோதரிகள் இருவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். சசிகலா புஷ்பா, ராமசாமி திருமணத்துக்கும் மதுரை மாவட்ட நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால் நீதிமன்றத் தடையை மீறி, சசிகலா புஷ்பா, ராமசாமியைத் திருமணம் செய்து கொண்டார்.

sasikala pushpa1 - 2026

அதன் பின்னர், சத்யபிரியா, அவரது சகோதரர் மணிகண்டன் ஆகியோர் மீது ராமசாமி தில்லி போலீஸாரிடம் ஒரு புகார் அளித்தார். அதில், தனது முதல் மனைவியின் மகளை, சத்யபிரியாவும் அவரது சகோதரர் மணிகண்டனும் கொடுமைப்படுத்தியதாகத் தெரிவித்தார். இந்தப் புகாரின்பேரில், சத்யபிரியா, மணிகண்டன் ஆகியோர் மீது தில்லி நார்த் அவென்யூ போலீஸார், குழந்தைகள் வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின் கீழ் மார்ச் 26 அன்று வழக்குப் பதிவு செய்தனர். அதன்பேரில், சத்யபிரியா, மணிகண்டன் இருவரையும் கைது செய்வதற்காக, தில்லி காவல் நிலைய சார்பு-ஆய்வாளர் விஜய்பால் தலைமையில் இரு பெண் காவலர்கள் உள்பட 5 போலீஸார் மதுரை வந்தனர்.

மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அனுமதி பெற்று, ஞாயிற்றுக்கிழமை மாலை சத்யபிரியாவின் வீட்டுக்குச் சென்றனர். ஆனால் சத்யபிரியா வீடு பூட்டப்பட்டிருந்தது. இதை அடுத்து அவரது வீட்டின் முன், தில்லி நார்த் அவென்யூ காவல் நிலையத்தில் ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெற உள்ள விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டினர்.

தில்லி போலீஸார் சத்யபிரியா வீட்டுக்கு வந்தபோது, அப்பகுதியினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தில்லி போலீஸார் கீரைத்துறை காவல் நிலையம் சென்று சத்யபிரியா குடும்பத்தினர் தொடர்பாக விசாரணை நடத்தினர். இவர்கள் இருவரையும் கைது செய்யும் வரை தில்லி போலீஸார் மதுரையில் தங்கியிருக்க திட்டமிட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories