மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அலுவலகம் வெளியிட்ட பத்திரிக்கை செய்தியில்…
திருவண்ணாமலையைச் சேர்ந்த இளம் தொழிலதிபர் சந்திரசேகரன் தலைமையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, கலசப்பாக்கம், அரடாப்பட்டு, வேலூர் மாவட்டம் விருதம்பட்டு, காட்பாடி ஆகிய பகுதிகளிலிருந்து 400க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் மகளிர் இன்று (10/6/2018) தங்களை மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் முன்னிலையில் தமிழக பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டனர்.
இந்த இணைப்பு நிகழ்ச்சியின் போது, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரவிராஜ், பா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினர் காஞ்சி குமாரசாமி, பா.ஜ.க காஞ்சி ஒன்றிய மகளிர் அணி வசந்தா மற்றும் பலர் உடன் இருந்தனர்.