December 5, 2025, 2:53 PM
26.9 C
Chennai

விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லிவிட்டார் முதல்வர் எடப்பாடியார்! ஆனால்…

edappadi palanisamy2 - 2025

சென்னை: நாளை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப் படவுள்ள நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு, இதுவரை இல்லாத அளவில் கெடுபிடிகள் கொடுத்து, இந்து அமைப்புகள் இதுவரையில் கொண்டாடி வந்த விநாயகர் சதுர்த்தி விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியாத அளவுக்கு நெருக்கடியைக் கொடுத்திருக்கிறார் என்று குற்றம் சாட்டுகிறார்கள் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த வாழ்த்து:

ஞான முதல்வனாகிய விநாயகப் பெருமான் அவதரித்த விநாயகர் சதுர்த்தி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை தம் திருவுருவாய்க் கொண்ட விநாயகப் பெருமானின் திரு அவதார தினமான இந்நன்னாளில் களிமண்ணால் செய்யப் பட்ட விநாயகர் சிலையை வைத்து, அருகம் புல், எருக்கம் பூ, செம்பரத்திப் பூ, வில்வ இலை போன்றவைகளைக் கொண்டு பூஜை செய்து, விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை, சுண்டல், பொரி, அவல், கரும்பு, பழங்கள் போன்றவற்றை படையலிட்டு, மக்கள் விநாயகர் சதுர்த்தி திருநாளை உற்சாகமாக கொண்டாடுவார்கள்.

வேழ முகத்து விநாயகனைத் தொழ
வாழ்வு மிகுந்த வரும்
– என்பதற்கேற்ப, விநாயகப் பெருமானின் திருவருளால் மக்கள் அனைத்து நலன்களையும் வளங்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்று வாழ்த்தி, அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் முதல்வர் பழனிசாமி.

இந்நிலையில், விநாயக சதுர்த்தி கொண்டாட 30 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 6 நிபந்தனைகள் விநாயகர் சதுர்த்தி சிலைகள் வைத்துக் கொண்டாடும் விழா அமைப்பாளர்களுக்கு விதிக்கப் பட்டுள்ளன.
1. மாசு கட்டுப்பாட்டு வாரியம் சான்றிதழ்
2. விநாயகர் வைக்கபடும் இடத்திற்கான ஆட்சேபனை இல்லா கடிதம்
3. மின் வாரிய அதிகாரி ஆய்வுக் கடிதம்
4. தீயணைப்பு அதிகாரி தடையில்லாச் சான்று
5. புதிதாக ஒரு இடத்தில் கூட வைக்க அனுமதி கிடையாது
6. கண்டிப்பாக சர்ச், மசூதி வழி செல்ல அனுமதி கிடையாது
– இப்படி எல்லாம் நடைமுறை சாத்தியமற்ற வகையில் நெருக்கடி கொடுத்து, விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்தையும் தெரிவித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்று குற்றம் சாட்டுகின்றார்கள் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories