கிணற்றில் விழுந்த தம்பதியர் நீச்சல் தெரியாமல் பலி..

ஆத்தூர் அருகே தெற்கு காடு பகுதியில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராரில் மனைவி கிணற்றில் குதித்தார்.இவரை காப்பாற்ற கிணற்றில் குதித்த கணவரும் நீச்சல் தெரியாமல் மூச்சு திணறி பலியாயினர்.இருவரும் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை‌ ஏற்படுத்தியுள்ளது.தீயணைப்புதுறையினர் உடலை மீட்டனர்.போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள 33வது வார்டு தெற்கு காடு சேரன் சாலையில் விவசாயி முனியன் மகன் விஜயகுமார் (30)இவருக்கும் கீரிப்பட்டியைச் சேர்ந்த செல்வி திருப்பதி தம்பதிகளின் மகள் கௌசல்யாவுக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது,

இதில் 4 வயதில் ஹரிஹரசுதன் என்ற மகனும் கீர்த்தி என்கிற 7 மாத பெண் குழந்தையும் உள்ள நிலையில்,
இவர்கள் அதே பகுதியில் உள்ள ரவி என்பவரின் விவசாயத் தோட்டத்தில் குத்தகைக்கு விவசாயம் செய்து வருகின்றனர்,

இந்நிலையில் கணவன் மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது அதே போல் இன்றும் கணவன் மனைவிக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டதில் கோபமடைந்த கௌசல்யா வீட்டின் அருகே உள்ள விவசாய தோட்ட கிணற்றில் குதித்துள்ளார் அதை பார்த்த கணவன் விஜயகுமாரும் அவரை காப்பாற்ற கிணற்றில் குதித்த போது இருவருக்கும் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்,

IMG 20230201 WA0108 - 2026

அப்போது விஜயகுமாரி தந்தை முனியன் கூச்சலிடவே அக்கம் பக்கதினர் வந்து ஆத்தூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் விரைந்து வந்த தீயணைப்புதுறையினர் நிலைய அலுவலர் அசோகன் தலைமையிலான தீயணைப்புத் துறை மற்றும் மீட்பு படை குழுவினர் நீண்ட நேரம் போராட்டத்துக்கு பின்னர் இருவரின் உடலையும் மீட்டனர் .

இதை அறிந்த ஆத்தூர் நகர காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குடும்பத் தகராறில் கணவன் மனைவி ஒரே நேரத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இச் சம்பவம் குறித்து ஆத்தூர் நகர‌ போலீசார்‌ விசாரணை நடத்தி வருகின்றனர்.

IMG 20230201 WA0107 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories