நான் கவர்னர் என்பது தமிழ் இனத்துக்குக் கிடைத்த பெருமை-சி.பி.ராதாகிருஷ்ணன்

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Published:

1141454 chennai 14 1 - 2026

நான் கவர்னராக நியமிக்கப்பட்டிருப்பது தமிழகத்திற்கு இன்னொரு பெருமை என்று ஜார்க்கண்ட் மாநில கவர்னராக விரைவில் பதவியேற்க உள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று திருப்பூரில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார் கூறினார்.

ஜார்க்கண்ட் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் திருப்பூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- மீண்டும் ஒரு கவர்னர் பதவியை ஜனாதிபதி , பாரத பிரதமர் மோடி அளித்திருப்பது, அவர்கள் தமிழ் இனத்தின் மீது, தமிழ் கலாச்சாரத்தின் மீது, தமிழ் பண்பாட்டின் மீது, தமிழ் மொழியின் மீது மற்றும் தமிழர்களின் மீது மகத்தான அன்பு, பாசம், மரியாதை இருப்பதை காட்டுகிறது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் கவர்னர் பதவியில் இருப்பது புதிய வரலாறு படைக்கப்பட்டிருக்கிறது. எனக்கு அளிக்கப்பட்டிருக்க இந்த பதவியின் மூலமாக அதிலும் குறிப்பாக ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு தரப்பட்டிருப்பது அங்கு வாழும் பழங்குடியின மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், சமுதாயத்திலே அடித்தட்டில் உள்ள மக்கள் வாழும் பகுதியில் எனக்கு பணியாற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த வாய்ப்பை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த திறம்பட பயன்படுத்துவேன். அடித்தட்டு மக்களின் வாழ்க்கை மேம்பட பணியாற்றுவேன். இது எனக்கு கிடைச்ச பெருமையாக நினைக்கவில்லை ஒட்டுமொத்த தமிழகத்திற்கு கிடைத்த பெருமையாக நினைக்கிறேன்.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி நான் பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பணியாற்றுவேன். இது நிச்சமாக எனக்குக் கிடைத்த பெருமையாக நான் நினைக்கவில்லை. தமிழ் இனத்துக்குக் கிடைத்த பெருமையாகும்.

மத்திய அரசுக்கும், ஜார்க்கண்ட் மாநில அரசுக்கும் பாலமாக இருந்து அடித்தட்டு மக்களின் வளர்ச்சிக்காகப் பாடுபடுவேன் என்று கூறிய அவர் எனக்கு இந்த வாய்ப்பை அளித்த ஜனாதிபதிக்கும், பிரதமர் மோடிக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.இந்த சந்திப்பின்போது பாஜக நிர்வாகிகள் உடனிருந்தனர்

Related articles

Recent articles

spot_img