அமராவதி அணையில் இருந்து பாசனத்துக்காக நாளை நீர் திறப்பு

Published:

panneerselvam சென்னை அமராவதி அணையில் இருந்து பாசனத்துக்காக நாளை நீர் திறந்துவிடப் படுகிறது. இதனை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவர் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடக் கோரி வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு 20.1.2015 முதல் தண்ணீர் திறந்துவிட ஆணையிடப்படுகிறது. இதனால், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 47,117 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்.

Related articles

Recent articles

spot_img