கூகுள் இளவரசன்

ன்றைய இண்டர்நெட்டின் மந்திரச் சொல் கூகுள்தான். இதனிடம் நீங்கள் எதையும் கேட்கலாம்…. எதையும் தேடலாம்… எதையும் பகிரலாம்… இவை எல்லாவற்றையும் கூகுள் உங்களுக்காக செய்யும்.

 

2006-ம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் டிக்ஷ்னரியில் கூகுள் என்ற வார்த்தை சேர்க்கப்பட்டபோது அது இவ்வளவு பெரிய வளர்ச்சி கண்டிருக்கவில்லை. ஆனால் அதன்பின் விண்ணைத் தொடும் விஸ்வரூப வளர்ச்சிதான். இந்த வளர்ச்சிக்குப் பின்னால் ஒரு தமிழர் இருந்திருக்கிறார் என்பது சமீப காலம் வரை யாருக்கும் தெரியாது. 2013-ல் தான் அவர் பெயர் முதன் முதலாக வெளியுலகில் கசியத் தொடங்கியது.

 

https%3A 2.bp.blogspot.com Z5OoRRKaDNA VG9NpX6bRrI AAAAAAAACek PxjKLU8RYmM s1600 heres what our google sources are saying about sundar pichais sudden rise - 2026

 

 

 

மைக்ரோ சாஃப்டின் CEO-வாக முதலில் அறிவிக்கப்பட்டவர் இவர்தான். அதன் பின்னர்தான் சத்யா நாதெள்ளா வந்தார். மைக்ரோ சாஃப்டிற்கு அடுத்தபடியாக டிவிட்டர்  தனது தலைவராக இவரை நியமித்ததாக டிவிட்டரிலேயே வதந்திப் பரவியது. 

 

யார் இவர்? எதற்காக ஒவ்வொரு நிறுவனமும் இவரைப் போட்டி போட்டுக் கொண்டு பதவி கொடுக்கத் துடிக்கிறது. இந்த துடிப்புக்குப் பின் அந்த நபரின் வெற்றி ரகசியம் ஒளிந்திருக்கிறது.

அவரின் பெயர் பிச்சை சுந்தர்ராஜன், வயது 42. சென்னையில் பிறந்து சென்னையிலேயே பள்ளிப் படிப்பை முடித்தவர். 

 

அவர் படித்த  அசோக் நகர் ஜவஹர் வித்யாலயா இன்று சந்தோ­த்தில் தலைகால் புரியாமல் குதிக்கிறது. பள்ளி படிப்பை முடித்தப்பின் கோரக்பூர் ஐஐடியில் பி.இ.மெட்டலர்ஜி படித்தார். படித்தது உலோகங்களைப் பற்றித்தான் என்றாலும் அவர் மனம் முழுவதும் எலக்ட்ரானிக்ஸ் பக்கமே இருந்தது. உலோக தொழில் நுட்பத்தில் முதல் மாணவனாக தேறினார்.

ALSO READ:  "We are all one", this realization of oneness is attained in the Varg : Atul Limaye

அமெரிக்காவில் உள்ள ஸ்டேன்ட்போர்டு பல்கலைக்கழகத்தில் எம்.எஸ். முடித்தார். அதன்பின் பென்ஸில்வேனியா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டம் பெற்ற கையோடு  மெக்கன்ஸி கம்பெனியில் சாப்ட்வேர் கன்சல்டன்டாக வேலைக்குச் சேர்ந்தார்.

 

2004-ல் தான் கூகுள் நிறுவனத்திற்குள் நுழைந்தார். அப்போதுதான் கூகுளும் சக நிறுவனங்களோடு போட்டிப் போட்டுக் கொண்டு வளர்ந்து கொண்டிருந்தது. மைக்ரோசாஃப்டின் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ப்ரவுசரை தொடர்ந்து உபயோகித்த கம்ப்யூட்டர் பணியாளர்கள் சலித்து போயிருந்த நேரத்தில், (மைக்ரோசாஃப்ட் கடைசியாக வெளியிட்ட விண்டோஸ் 8 வாடிக்கையாளர்களை ஈர்க்கவில்லை) பல மடங்கு வேகம் நிறைந்த குரோம் ப்ரவுசரை அறிமுகப்படுத்தினார். இன்று உலகின் அதிகவேக ப்ரவுசராக குரோம் இருக்கிறது.

 

கூகுள் டிரைவ் வளர்ச்சிக்கும் சுந்தர் பிச்சை பெரும் பங்கு வகித்திருக்கிறார். அதன்பின் கூகுள் அறிமுகப்படுத்திய ஆண்ட்ராய்ட் சிறப்பான வளர்ச்சி பெற உறுதுணையாக இருந்தார். இந்திய சந்தையை மனதில் வைத்தே ‘ஆண்ட்ராய்ட் ஒன்’ என்ற திட்டத்தை தொடங்கினார். 50 லட்சம் வாடிக்கையாளர்களைச் சேர்த்தார்.

இன்றைய இன்டர்நெட் உலகில் அசைக்க முடியாத சாம்ராஜ்யத்தை கூகுள் நிறுவியுள்ளது. உலகம் முழுவதும் 10 லட்சத்திற்கும் அதிகமான ‘பேசிக் இன்ஃபர்மே­ன் சென்டர்’களை வைத்துள்ளது. அமெரிக்காவை மையமாக வைத்து உலகின் பல நாடுகளில் கூகுள் செயல்படுகிறது. இதில் 52,000 பேருக்கு மேல் பணியாற்றுகிறார்கள். அத்தனை பேருக்கும் சுந்தர் பிச்சைதான் தலைவர். கூகுளின் இரண்டாவது தலைவர். அதாவது  இளவரசர்.

ALSO READ:  Videsi se Desi: A New Era of Secure and Aatmanirbhar Digital Communication!

அப்படிப்பட்ட பெரும் சாம்ராஜ்யத்தில் முதுநிலை துணைத்தலைவராக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 2011-ல் கூகுள் குரோம் பிரவுசர், ஜி மெயில், ஆப்ஸ் போன்ற பிரிவுகளுக்கான பொறுப்பாளராக சுந்தர் நியமிக்கப்பட்டார். 2013-ல் ஆண்ட்ராய்ட் சாஃப்ட்வேருக்கான பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். ஸ்மார்ட் போன்களில் ஏற்பட்டுள்ள புதுமைகளுக்கு எல்லாம் ஆண்ட்ராய்ட் சாஃப்ட்வேர்தான் காரணம். உலகின் உள்ள செல்போன்களில் 120 கோடி போன்களில் ஆண்ட்ராய்ட் பயன்படுத்தப்படுகிறது.

1998-ல் லாரி பேஜ் மற்றும் சேர்ஜி பிரின் என்ற நண்பர்கள் இருவரும் சேர்ந்து  தொடங்கிய இந்த நிறுவனம் இப்படி பிரமான்ட வளர்ச்சிபெறும் என்று அவர்கள் நினைத்ததில்லை. தொடக்க காலத்தில்  இணைய உலகிலுள்ள தகவல்களை ஒருங்கிணைப்பதே கூகுளின் நோக்கமாக இருந்தது. அதன்பின் தேடுதல் பொறியுடன் ஜிமெயில் எனப்படும் கூகுள் மெயில், கூகுள் டாக், கூகுள் மேப்ஸ், கூகுள் நியூஸ், ப்ளாக்கர், யூ ட்யூப் போன்ற பல பிரிவுகளை அறிமுகப்படுத்தி ஒவ்வொரு பிரிவிலும் நம்பர் ஒன்னாகத் திகழ்ந்தது கூகுள்.

அந்நிறுவனத்தின் தலைவரான லாரி பேஜ் சுந்தர் பிச்சையைப் பற்றி இப்படி குறிப்பிடுகிறார். “”அவர் ஆழமான தொழில்நுட்ப அனுபவம், உற்பத்தி மீதான சிறப்பான கணிப்பு, தொழில் முனைப்பு திறமை ஆகியவற்றின் அரிய ஒருங்கிணைப்பாக இருக்கிறார்” எனப் பாராட்டுகிறார்.

ஏற்கெனவே கூகுள் ஆண்ட்ராய்ட், குரோம் மற்றும்  ஆப்ஸ் ஆகிய பிரிவுகளின் தலைமைப் பொறுப்பை வகித்து வந்த சுந்தர் பிச்சை, இப்போது கூடுதலாக கூகுள் பிளஸ், கூகுள் மேப்ஸ், காமர்ஸ், இன்ஃபிராஸ்டரக்ச்சர், கூகுள் சர்ச், சோஷியல் மீடியா, விளம்பரம் மற்றும் ஆராய்ச்சி ஆகிய பிரிவுகள் சுந்தர் பிச்சை கட்டுப்பாட்டில் வந்துள்ளன.

ALSO READ:  "We are all one", this realization of oneness is attained in the Varg : Atul Limaye

 

https%3A 2.bp.blogspot.com PYgBrtN19C4 VG9ONhI9tpI AAAAAAAACes iegErWfS1pQ s1600 o SUNDAR PICHAI facebook - 2026

 

கூகுளின் இன்னொரு பிரிவான ‘யூ டியூப் ‘ லாரி பேஜ் கட்டுப்பாட்டிலே இருக்கும். கூகுள் நிறுனம் அடுத்ததாக ஆண்ட்ராய்ட் கார் தயாரிக்க உள்ளது. இந்த காரிடம் நாம் எந்த ஊருக்கு செல்லவேண்டும் என்ற விவரத்தைச் சொன்னால் போதும் சேட்டிலைட் மூலமாக கூகுள் மேப்ஸ் துணையோடு தானே வழிகளைக் கண்டுபிடித்து சரியான இடத்தில் நம்மை கொண்டு சேர்த்துவிடும்.

மேலும் ஆண்ட்ராய்ட் டிவிக்களையும் கூகுள் தயாரிக்க உள்ளது.  இவற்றில் சுந்தர் பிச்சையின் பங்களிப்பு மிக அதிகமாக இருக்கும். சுந்தர் பிச்சையை மென்பொருள் உலகம் ஆண்ட்ராய்ட் ஜீனியஸ் என்று அழைக்கிறது. சுந்தருக்கு 11 வயதில் ஒரு மகள் இருக்கிறார். அவரது தந்தை சென்னை ஜிஇசி எலக்ட்ரிகல் நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றியுள்ளார்.

 

ஒரு தமிழர் இணைய சாம்ராஜ்யத்தின் இளவரசனாக முடி சூட்டியிருப்பது நமக்கெல்லாம் மகிழச்சிதானே! கூகுளின் தலைவராக சுந்தர்பிச்சை பொறுப்பேற்றிருப்பது நமக்கெல்லாம் மகிழ்ச்சியே!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

Entertainment News

Popular Categories