பாரதியார் அப்படி நடந்திருப்பாரா..?!

அது நாகர்கோயிலில் நடைபெற்ற இலக்கிய கூட்டம். என் நண்பர் ஒருவர் என்னையும் அழைத்திருந்தார். எனக்கு பேசத்தெரியாததால் வழக்கம்போல் பார்வையாளனாக கலந்துக் கொண்டேன். அங்கு பல விவாதங்கள் நடந்தன. இலக்கிய சொற்பொழிவுகள் அரங்கேறின. அப்போது ஒரு எழுத்தாளர் சொன்ன தகவல் இன்னும் என் மனதை வாட்டிக் கொண்டிருக்கிறது. அது பாரதியார் பற்றிய தகவல். நாம் இத்தனை காலம் உண்மை என்று ஆணித்தரமாக நம்பிக் கொண்டிருந்த ஒரு நம்பிக்கையின் மீது வீழ்ந்த அடி. 

3.bp.blogspot.com ylf3 9ubgEk VfMfeYBjHqI AAAAAAAAF84 CI91WdqXqVQ s400 0bb3d9ac170d0bcdbb12826513314329 large - 2026
 
எழுத்தாளரும் கவிஞருமான அவர் சிங்கப்பூர் தமிழர்கள் நடத்திய ஒரு விழாவில் கலந்து கொள்வதற்காக அங்கு சென்றிருக்கிறார். அவர் தங்கியிருந்த ஓட்டலில் இவரைப் போலவே விழாவில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த மற்றொருவரை சந்தித்திருக்கிறார். அவரிடம் நமது எழுத்தாளர் கொஞ்சம் தமிழும் கொஞ்சம் ஆங்கிலமும் கலந்து பேசியிருக்கிறார். அதற்கு அந்த பெரியவர், “எனக்கும் தமிழ் தெரியும். உங்களுக்கும் தமிழ் தெரியும். அப்படிருந்தும் ஏன் இடையிடையே ஆங்கிலத்தில் பேசுகிறீர்கள். ஆங்கில சொற்கள் கலக்காமல் பேசுங்களேன். நன்றாக இருக்கும்.” என்று கூறியிருக்கிறார். இதனால் இயல்பாகவே அவர் மீது நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டிருக்கிறது. தினமும் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். 
 
மூன்று நாட்கள் அந்த ஓட்டலில் இருந்ததில் அவரிடம் மிக நெருங்கிப் பழகிவிட்டார் நமது எழுத்தாளர். அந்த நெருக்கத்திற்கு மற்றொரு முக்கிய காரணமும் உண்டு. அந்த நபர் சுப்ரமணிய பாரதியின் தம்பி மகன். பாரதியைப் பற்றி பல அறியப்படாத தகவல்களை அவர் சொல்லியிருக்கிறார். அதில் ஒன்றுதான் மேலே நான் சொல்லப் போவதாக  சொன்ன தகவலும். 
 
1.bp.blogspot.com aqyP94G 50I VfMfuCLigQI AAAAAAAAF9A NrL5TXEXS3A s400 hqdefault - 2026
 
பாரதியார் கண்ணம்மா என்ற பெயரில் கண்ணனை பற்றி பாடியதாகத்தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் கண்ணம்மா என்ற பெயரில் ஒரு பெண் இருந்ததாகவும். அந்தப் பெண்ணைத்தான் பாரதியார் பாடியதாகவும், அந்தப் பெண் ஒரு விதவை என்றும் அவர் கூறியிருக்கிறார். 
 
பாரதியின் வீட்டுக்கு எதிரேதான் அந்தப் பெண் இருந்திருக்கிறார். அந்தப் பெண்ணுக்கு ஐந்து அண்ணன்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் பாரதியாரை மிரட்டியிருக்கிறார்கள். கண்ணம்மா என்ற பெயரில் பாடல் எழுதக்கூடாது என்று கட்டளை இட்டிருக்கிறார்கள். பாரதிதான் அஞ்சாநெஞ்சனாயிற்றே இந்த மிரட்டலை எல்லாம் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து கண்ணம்மா பெயரில் பாடல்கள் எழுதியிருக்கிறார். 
 
பொறுமையின் எல்லையை கடந்த சகோதரர்கள் ஒரு கட்டத்தில்  பாரதியாரை அடித்து நொறுக்கியிருக்கிறார்கள்  இதற்கு முதல் நாள்தான் கோயில் யானை வேறு பாரதியாரை கீழே தள்ளிவிட்டிருக்கிறது. பாரதிக்கு பலத்த காயம்தான், யானை தள்ளியதால் அல்ல, சகோதரர்கள் அடித்ததால். ஒருசில நாட்களில் பாரதியார் இறந்து விடுகிறார். அவர் மரணத்துக்கு காரணம் யானை அல்ல. என்று மீண்டும் அழுத்தமாக அவர் கூறியதாக எழுத்தாளர் கூறினார். இதற்கு ஆதாரம் எதுவும் உள்ளதா என்று தெரியவில்லை. ஆனால் பாரதி சார்ந்த குடும்பத்தினரே கூறும் போது அதை நம்பாமலும் இருக்கமுடியவில்லை. 
 
அப்போதிருந்த எனக்கு இதை நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. வரலாற்று ஆய்வாளர்கள் இதை விளக்கினால் நன்றாக இருக்கும். விளக்குவார்களா..!!!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Entertainment News

Popular Categories